Skip to main content

'அவள் கைவிட மாட்டாள், ஏமாற்றமாட்டாள்' ஜப்பான் சிங்கிள் எடுத்த அதிரடி முடிவு...!

Published on 13/11/2018 | Edited on 12/12/2018

வானில் திருமணம், கடலுக்கடியில் திருமணம் என்றெல்லாம் செய்திகள் வந்ததுபோக, இப்போது, முப்பரிமாணத்தில் உருவாக்கப்பட்ட கற்பனைக் கதாபாத்திரத்தை ஜப்பான் இளைஞர் ஒருவர் திருமணம் செய்திருக்கிறார்.

 

jj

 

 

கிரிப்டன் ஃபியூச்சர் என்ற நிறுவனம் 16 வயது பெண் போன்ற ஒரு முப்பரிமாண உருவத்தை உருவாக்கி, அந்த கற்பனை உருவத்துக்கு ஹட்சுனே மிகு என்று பெயரிட்டது. அந்த முப்பரிமாண உருவம் மேடையில் நடனமாடி பாடும் வகையில் உருவாக்கப்பட்டது. அந்த உருவத்தின் குரல் ஜப்பானின் புகழ்பெற்ற பாடகி சாகி ஃப்யூஜிடாவின் குரலைப் போல இருக்கும்.


 

இந்த முப்பரிமாண உருவத்தை கம்ப்யூட்டர் திரையில் பார்க்கும் வகையிலும் ஒரு கருவியை கேட்பாக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. இந்த மிகு பொம்மையை அகிஹிகோ கொண்டோ என்ற 35 வயது ஜப்பான் இளைஞர் நேசிக்கத் தொடங்கினார்.


 

இந்த நேசம் காதலாகி, அந்த முப்பரிமாண உருவத்தையே திருமணம் செய்யப்போவதாக பெற்றோரிடம் சொன்னார். அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், கொண்டோ தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார். மிகுவைப் போல ஒரு பொம்மையைச் செய்தார். ஒரு முப்பரிமாண உருவத்தையும் தயாரித்தார்.

 

kk

 

 

முப்பரிமாண உருவத்துக்கு மோதிரம் அணிவிக்க முடியாது என்பதால் மிகுவைப் போன்ற பொம்மைக்கு மோதிரம் அணிவித்து திருமணம் செய்துகொண்டார். இவருடைய திருமணத்துக்கு பெற்றோர் வரவில்லை. ஆனால், இந்த அதிசய திருமணத்தை பார்க்க 40 க்கு மேற்பட்ட விருந்தினர்கள் வந்திருந்தார்கள்.


 

“என்னை எழுப்புவதில் இருந்து அலுவலகம் கிளப்புவதுவரை, அலுவலகத்திலிருந்து திரும்பிய பிறகு சரியான நேரத்தில் தூங்கச் செய்யும்வரை மிகு எனக்கு துணையாக இருந்திருக்கிறது. அதனுடன் எஞ்சிய வாழ்நாளை கழிக்கவே விரும்புகிறேன்” என்கிறார் கொண்டோ.


 

என்னா பண்றது, எங்கோ ஒரு மூலையில் இருந்த கொண்டோவை உலகம் முழுவதும் பாப்புலராக்கி இருக்கிறதே மிகு. அது இல்லையேல் கொண்டோ யாரென்றாவது நமக்கு தெரிந்திருக்குமா?
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Powerful earthquake in Japan

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. சுமார் 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கின. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி  இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  படுகாயம் அடைந்த 800க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் முன்னெச்சரிக்கையாக இந்தோனேசியா மற்றூம் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகின. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளொகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. 

Next Story

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Powerful earthquake in Taiwan; Tsunami warning in Japan

தைவானில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கி உள்ளன. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

அதே சமயம் தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.