Skip to main content

பாகிஸ்தான் எல்லையில் பயங்கரம்; நான்கு பாதுகாப்பு வீரர்கள் பலி!

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

iran pakistan border issue in iran  

 

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகி உள்ளனர்.

 

ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கிராமம் சரவண். இங்கு ஈரான் பாதுகாப்புப் படை வீரர்கள் வழக்கம்போல் தங்களது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். கண்ணிமைக்கும் நேரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றதால் பாதுகாப்புப் படைவீரர்கள் சமாளிப்பதற்குள் பயங்கரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர்.

 

இந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூடு  சம்பவத்தால் பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் மேலும் பல வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தால் ஈரான், பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்