Skip to main content

ஜகா வாங்கும் எலான் மஸ்க்...

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

ELON

 

உலகின் பிரபலமான சமூக ஊடகமான ட்விட்டரை நம்பர் உன் கோடீசுவரரான எலான் மஸ்க் வாங்கியுள்ளார், இன்னும் ஆறு மாதங்களில் ட்விட்டரின் முழு கட்டுப்பாடும் எலான் மஸ்க் வசம் வந்துவிடும் என்றெல்லாம் செய்திகள் உலா வந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவிலிருந்து பின்வாங்கிவிடுவாரோ எலான் மஸ்க் என எண்ணத்தோன்றும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

எலான் மஸ்க்கை ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் பலர் போலி பயனர்கள் என்ற சர்ச்சை அவர் ட்விட்டரை வாங்கப்போவதாக அறிவித்த பொழுதே அரசல்புரசலாக அடிபட்டது. இந்நிலையில் ட்விட்டரில் மொத்தமுள்ள கணக்குகளில் 5 சதவிகித கணக்குகள் போலி என்பது தெரியவர, அதனை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டரை வாங்குவதாகப் பேச்சு அடிபட்டபோதே கொக்ககோலா நிறுவனத்தை வாங்கி அதில் கொக்கினை சேர்க்கப் போவதாக எலான் மஸ்க் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். கடைசியில் அது நகைச்சுவைக்காகத் தான் இட்ட பதிவு என அவரே தெளிவுபடுத்தி இருந்தார். அதேபோல் மெக்டொனால் நிறுவனத்தை வாங்கி அங்குள்ள பழுதடைந்த ஐஸ் க்ரீம் இயந்திரங்களை பழுதுபார்க்க உள்ளதாக அவர் பதிவிட்டிருந்ததும் கடைசியில் விளையாட்டு என தெரியவந்தது. அதை வாங்குகிறேன் இதை வாங்குகிறேன் என கூறி கடைசியில் ஜகா வாங்கியுள்ளார் எலான் என கமெண்ட் அடித்து வருகின்றனர் இணையவாசிகள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகளின் அக்கவுண்ட்டை முடக்க மத்திய அரசு உத்தரவு; எக்ஸ் நிறுவனம் அதிருப்தி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
 Company X is dissatisfied for Central government order to freeze pages

தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கெனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.

பஞ்சாப் - ஹரியானாவின் மற்றொரு எல்லையான காணுரியில், நேற்று (21-ஆம் தேதி) காலை முதல் தொடர்ந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் ஹரியானா போலீசார், விவசாயிகளைக் கலைத்து வருகின்றனர். காவல்துறையினரால் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு வெடித்து, பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன் சிங் (வயது 24) என்னும் இளம் விவசாயி உயிரிழந்தார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, போராட்டத்தில் உள்ள விவசாயிகள் மீது போலீசார் நடத்தும் கண்ணீர்புகை குண்டு வீசும் வீடியோக்களை விவசாயிகள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அரசின் உத்தரவின் பேரில் சில கணக்குகள் மற்றும் பதிவுகள் நீக்கப்பட்டதாக எக்ஸ் (ட்விட்டர்) இன்று (22-02-24) தெரிவித்துள்ளது. 

இது குறித்து, எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்தின் உலக அரசுகள் விவகார பிரிவு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, ‘இந்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்க, குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை இந்தியாவில் மட்டும் நிறுத்தி வைப்போம். இந்த நடவடிக்கையை எடுத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும், கருத்து சுதந்திரம் என்பது இந்த பதிவுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். 

எங்கள் நிலைப்பாட்டிற்கு இணங்க இந்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. எங்கள் கொள்கையின்படி, பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இந்த நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பையும் நாங்கள் வழங்கியுள்ளோம். சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய அரசின் நிர்வாக உத்தரவுகளை வெளியிட முடியவில்லை. ஆனால், வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் இந்த உத்தரவை பொதுவெளியில் வைப்பது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளது. 

Next Story

முடங்கியது 'எக்ஸ்'

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
 Disabled 'X'

உலக அளவில் எக்ஸ் எனும் ட்விட்டர் இணையதளம் முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல பணக்காரரான எலான் மஸ்க்கால் வாங்கப்பட்ட பிறகு பல்வேறு பிரச்சனைகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது ட்விட்டர். டிவிட்டருக்கு எக்ஸ் (x ) என பெயர் மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது 'x' வலைத்தளமானது உலகம் முழுவதும் முடங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பல கோடி பயனர்கள் அவதியுற்று வருகின்றனர்.