Skip to main content

இறந்த எலும்புக்கூடு இறக்காத காதல்!! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய தொல்பொருள் கண்டுபிடிப்பு!!

Published on 13/07/2018 | Edited on 13/07/2018

 

உக்ரைனில் தொல்பொருள் ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான படிம எலும்புகூடு காதலன் காதலி என இருவரும் பின்னி அன்புடன் இறுக தழுவி இறந்த நிலையில்  இருப்பது மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 skeleton

 

 

 

மேற்கு உக்கரைனில் தெர்னோபில் என்ற இடத்தில் சமீபத்தில் நடந்த தொல்லியல் ஆராய்ச்சியில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு பழமையான ஜோடி எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட அந்த ஜோடி எலும்புக்கூடுகள் ஒன்றை ஓன்று ஆரத்தழுவி பார்த்தவுடனே கணவன் மனைவி அல்லது காதலன் காதலி நெருக்கத்தின் போது மரணத்தை எதிர்கொண்டது போன்றும் அல்லது ஒன்றாக இறந்துவிட வேண்டும் என முடிவெடுத்து இறந்தது போன்றும் பார்ப்பதற்கே அன்பு மற்றும் கருணையின் வடிவமாக இருந்தது. 

 

அந்த எலும்புக்கூடுகள் பற்றி தொல்பொருள் ஆராச்சியாளர்கள் குறிப்பிடுகையில்,

இந்த தம்பதிகளின் எலும்புக்கூடு 3000 வருடத்திற்கு பழமையானது. உக்ரைன் மனித கலாச்சாரத்தில் காதல் என்ற வார்த்தை புனிதமாக பொறுப்புணர்வுடன் கையாளப்பட்டது. அப்படி இருக்க இந்த எலும்புக்கூடு படிவத்தை பார்க்கும்பொழுது ஏற்கனவே இறந்த கணவன் அல்லது காதலனை காதலி விட்டு பிரிய மனமின்றி அவரைபற்றி அணைத்து இறந்திருக்கலாம். எப்படியோ இதுவும் உண்மை காதலுக்கான மற்றோரு சான்று என்று கூறி பெருமைப்பட்டனர்.      

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கி.மீ பயணித்த ஜி.எம். குமார்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
actor gm kumar drove 3500 kms to meet his ex

வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி.எம் குமார். பாலாவின் அவன் இவன் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். கடைசியாக கடந்த ஆண்டு கலையரசன் நடிப்பில் வெளியான புர்கா படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவரது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பது அவரது வழக்கம். அதில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் அவர், தற்போது தனது முன்னாள் காதலியை பார்க்க 3500 கி.மீ பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மெட்ராஸிலிருந்து பெங்களூரு வழியாக கோவா சென்றுள்ளதாகவும் பின்பு பாம்பே சென்று மீண்டும் மெட்ராஸ் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

Next Story

மீண்டும் ஒரு ஆணவக்கொலை; சென்னையில் பயங்கரம்

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Again a manslaughter; Terrible in Chennai

சென்னை பள்ளிக்கரணையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். சல்லடையான்பேட்டை பகுதியில் சர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்த திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து நேற்று இரவு அந்த பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பள்ளிக்கரணை போலீசார் நடத்திய விசாரணையில் இது சாதி ஆணவப் படுகொலை என்பதை அறிந்து கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீண்டும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.