Skip to main content

கரோனாவுக்கு சிங்கப்பூரில் முதல் பலி - பொதுமக்கள் அச்சம்!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 



ஆனாலும் கரோனா தாக்குதலுக்கு உயிரிழப்புக்கள் தொடர்கின்றது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இதுவரை 170 நாடுகளுக்கு மேல் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில்  இந்த வைரஸ் தாக்குதலுக்கு சிங்கப்பூரில் முதல் பலியாக 75 வயது மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் அந்நாட்டில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்