Skip to main content

வசதி வாய்ப்பற்ற குழந்தைகளுக்காக பள்ளிக்கூடங்களைத் திறக்கும் அமேசான் நிறுவனர்!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

Jeff Bezos

 

வசதி வாய்ப்பற்ற குழந்தைகள், ஆரம்பக் கல்வியைக் கற்பதற்கு வழி செய்யும் வகையில், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் பள்ளிக்கூடங்களைத் திறக்க இருக்கிறார்.

 

ஜெப் பெசோஸ் உலகின் மிகப்பெரிய இணையதள வணிக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஆவர். இவர் உலகப் பணக்காரர் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். 'எளிய குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் சில முயற்சிகளைச் செய்ய இருக்கிறேன்' எனக் கடந்த 2018 -ஆம் ஆண்டே அறிவித்தார். தற்போது, அதன் அடுத்த கட்டம் குறித்தான தகவலைத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

அதில், வாஷிங்டன் நகரில் அவர் தொடங்கியுள்ள பள்ளியின் புகைப்படத்தைப் பகிர்ந்து, "இது தொடக்கம் தான். பெசோஸ் அகாடமி வரும் அக்டோபர் 19-ம் தேதி திறப்பு விழா காண இருக்கிறது. வசதி வாய்ப்பற்ற குழந்தைகளுக்காக நாங்கள் உருவாக்கி வரும் பள்ளியில், இது முதல் பள்ளிக்கூடம். கரோனா நேரத்திலும் இதைச் சாத்தியமாக்க உழைத்த குழுவினருக்கு வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெஃப் பெசோஸ்- எலான் மஸ்க் மோதலால் தள்ளிப்போன நாசா திட்டம்!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

elon musk jeff

 

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்த போது, 2024 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து நிலவில் மனிதர்களை தரையிறக்கும் லேண்டரை வடிவைப்பதற்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது.

 

அதன்தொடர்ச்சியாக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்திற்கு லேண்டரை வடிவைப்பதற்கான 2.9 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை நாசா வழங்கியது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது.

 

இந்தநிலையில் நாசா நிர்வாகி பில் நெல்சன், இந்த வழக்கின் காரணமாக ஏழு மாதங்களை இழந்துவிட்டதாகவும், இதன் காரணமாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் 2025 ஆம் ஆண்டிற்கு முன்பு நடைபெற வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

அசுர வேகத்தில் முன்னேறிய எலான் மஸ்க்; விட்ட இடத்தைப் பிடித்த முகேஷ் அம்பானி!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

elon musk- mukesh ambani

 

போர்ப்ஸ் பத்திரிக்கை, 'உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலை' ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்தாண்டிற்கான உலகத்தின் பெரும் பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை நேற்று வெளியிட்டது. இதில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். அவரின் சொத்துமதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்தப் பட்டியலில், இரண்டாம் இடத்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார். கடந்தாண்டு இவர் 31 ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரின் தற்போதைய சொத்துமதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி, 10 ஆம் இடத்தில் உள்ளார். மேலும், அவர் சீனா கோடீஸ்வரர் ஜாக் மாவை பின்னுக்குத் தள்ளி, மீண்டும் ஆசியாவின் பெரும்பணக்காரர் அந்தஸ்தைப் பெற்றுள்ளார். அவரின் சொத்து மதிப்பு, 84.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

 

இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு அடுத்த இடத்தை கௌதம் அதானி, பிடித்துள்ளார். அவரின் சொத்துமதிப்பு 50.5 அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்தியாவில் பில்லியன் டாலர்களுக்கு மேல் 140 பேர் சொத்து வைத்துள்ளனர். இதன்மூலம் அதிக பணக்காரர்களைக் கொண்ட பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் சீனாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.