Skip to main content

உலகமெங்கும் கவர்னர்கள் இப்படித்தானா?

Published on 19/04/2018 | Edited on 19/04/2018
eric missouri governor


அமெரிக்காவிலுள்ள மிசௌரி மாகாணத்தின் ஆளுநர் எரிக் கிரிட்டன்ஸ், அவரின் ஒப்பனையாளரான ஒரு பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியிருக்கிறார் என்று மிசௌரி மாகாண நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர்தான் இந்த வழக்கு பற்றிய அறிக்கை, சம்மந்தப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டை வெளியிட்டு இருக்கின்றனர்.   
 

அந்த ஆளுநர் ரிபப்ளிக்  கட்சியை சேர்ந்தவர். இப்படி ஒரு குற்றச்சாட்டு அவர் மீது இருப்பதால், "நீங்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்வது நல்லது" என்று கட்சியை சேர்ந்தவர்களும், ரிபப்ளிக்  கட்சியின் மாகாண அட்டர்னி ஜெனரல் ஜோஷ் ஹாவ்லியும் தெரிவித்துள்ளார். ஜோஷ் இந்த  ஆண்டின் செனட் வேட்பாளரும் கூட. இருந்தாலும் எரிக் பதவியில் இருந்து ராஜினாமா செய்யாமல், "இது அனைத்தும் என் மீது சுமத்தப்பட்ட அப்பட்டமான பொய்" என்கிறார்.

கடந்த செவ்வாய்கிழமை, ஜோஷ் (அட்டர்னி ஜெனரல்), மேலும் ஒரு குற்றச்சாட்டை எரிக் மீது வைத்துள்ளார். அது என்ன என்றால், எரிக் ஆரம்பித்த ஒரு என்ஜிஓவுக்கு சட்டவிரோதமாக நிதி திரட்டியிருக்கிறார் என்று குற்றச்சாட்டை வைத்திருக்கின்றனர். இதன் மூலம் அந்த ஆளுநருக்கு மக்களிடையே கெட்ட பெயர் அதிகரித்துள்ளது. இந்த பாலியல் வழக்கு நிரூபிக்கப்பட்டால் நான்காண்டு சிறைத்தண்டனை எரிக்குக்கு நிச்சயம் வழங்கப்படும் என்கின்றனர்.
 

ஜூன் 1ஆம் தேதி அவரது கட்சியை சேர்ந்தவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டுவருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "இது கட்சியிலும், மக்கள் மத்தியில் எனக்கு இருக்கும் நல்ல பெயருக்கும் பங்கம் விளைவிக்கவே இவ்வாறு கட்டமைக்கிறார்கள்", என்று எரிக் சொல்கிறார்.    

சார்ந்த செய்திகள்

Next Story

“பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்க நேரிடும்” - ஆளுநர் எச்சரிக்கை

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

Governor Banwarilal  has warned that recommend President rule  Punjab

 

பஞ்சாபில் ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்ய நேரிடும் என முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. அங்கு முதல்வராக இருக்கும் பகவந்த் சிங் மானுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் இடையே சட்டப் பேரவையைக் கூட்டுதல், பல்கலை. வேந்தர் பதவி உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் போதைப் பொருள் புழக்கம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் முதல்வர் பகவந்த் சிங் மானுக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அதற்கு பகவந்த் சிங் எந்த விதப் பதிலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில்தான் ஆளுநர் பன்வாரிலால், மாநில சட்ட ஒழுங்கு குறித்து நான் எழுதும் கடிதங்களுக்குப் பதிலளிக்க வேண்டும். அப்படி பதில் அளிக்காவிட்டால் அரசியல் அமைப்பு சட்ட நடவடிக்கையைச் சீர்குலைத்துவிட்டதாகக் கூறி ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்ய நேரிடும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

 

Next Story

''தமிழ் இனிமையான மொழி'' - ஆளுநர் உரையுடன் துவங்கியது சட்டப்பேரவை கூட்டம்!   

Published on 21/06/2021 | Edited on 21/06/2021

 

'' Tamil is a sweet language '' - The meeting of the legislators started with the speech of the Governor!

 

தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் கூடியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். ஐடி கார்டு பெற்ற கரோனா இல்லாத எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர். 

 

தற்போது சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அவர் உரையாவது, ''தமிழ் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள். அரசின் ஒவ்வொரு செயலும் சமூகநீதி, ஆண் - பெண் சமத்துவம். அனைவருக்குமான பொருளாதார நீதியை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அரசின் ஒவ்வொரு செயலும் சட்டமும் திட்டமும் முயற்சியும் இந்த கொள்கைகளைக் கொண்டிருக்கும்.  தனக்கு வாக்களித்தோர் என்றும் வாக்களிக்காதோர் என்றும் எவ்வித பாரபட்சமும் இன்றி அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்படும். தமிழை இந்திய அலுவல் மொழியாக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.  தமிழை ஒன்றிய அலுவல் மொழியாக பயன்படுத்த அரசியல் சட்டத்தில் 343வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும். உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஏற்ப மத்திய அரசுடன் நல்லுறவு பேணுவோம். மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது. கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கப்படும். 

 

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தமிழ்நாடு அரசுக்குத் தேவைப்படும் பல்வேறு கோரிக்கைகளைப் பிரதமரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும். மத்திய அரசு வழங்கும் தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. தமிழ்நாட்டின் நிதி நிலையைக் குறித்து ஜூலையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 335.01 கோடி ரூபாய் நிதி உதவி வந்துள்ளது.

 

மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்களின் மீதான புகார்களை விசாரிக்கும் லோக்ஆயுக்தா அமைப்பிற்கு உரிய அதிகாரம் அளிக்கப்படும். ஊழல் தடுப்பு விழிப்புப் பணி ஆணையரகம் முடுக்கிவிடப்பட்டு நிலுவையில் உள்ள புகார்கள் விசாரிக்கப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவை கொண்டுவந்து ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவோம். தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான சட்டங்கள் நிறைவேற்றப்படும்.  நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரையைப் பெற்று சட்ட முன்வடிவுக்கான  நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படும்.

 

உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட எல்லை வரைவு முறையாக இருப்பதை உறுதிசெய்த பின்னர் தேர்தல் நடத்தப்படும். கரோனா தீவிரம் குறைந்தவுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும். பெரிய நகரங்களில் நெருக்கடியைக் குறைக்க புறநகர் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும். கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது அணை திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்'' என்றார்.