Published on 27/06/2019 | Edited on 27/06/2019
மும்பையிலிருந்து அமெரிக்காவின் நேவார்க் நகரை நோக்கி சென்ற ஏர்இந்தியா 191 விமானம் வெடிகுண்டு காரணமாக பாதி வழியில் தரையிறக்கப்பட்டது.

மும்பையில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட இந்த விமானம் அமெரிக்காவின் நெவார்க் நகருக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து லண்டனின் ஸ்டேன்ஸ்ட்டேட் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனையடுத்து அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.