Skip to main content

சாரை பாம்பைச் சமைத்துச் சாப்பிட்ட சம்பவம்; வைரல் வீடியோவால் வசமாக சிக்கிய இளைஞர்

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
Youth arrested for eating snake juice

திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேஷ்குமார் (30). இவர் நேற்று சமூக வலைதளங்களில் சாரை பாம்பை தோல் உரிப்பது போல் வீடியோ ஒன்றை பதிவு செய்தார்.

இதனை ஆதாரமாகக் கொண்டு திருப்பத்தூர் கோட்ட மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின் படி திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன்  தலைமையில் வனவர் மற்றும் வனப் பணியாளர்கள்  இந்த வீடியோ வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெருமாபட்டு கிராமத்திற்குச் சென்று ராஜ்குமாரை கைது செய்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சாரை பாம்பை தோல் உரித்து அதனை சமைத்து கறியாக்கி சாப்பிட்டதை ஒப்புக்கொண்டார். எதற்காக இப்படி செய்தாய் எனக்கேட்ட அதிகாரிகளிடம், அப்படி சாப்பிட்டால் உடல் பலம் பெருகும், ஆண்மை அதிகரிக்கும்னு சொன்னாங்க. அதான் பாம்பை தேடிப்பிடிச்சி அடிச்சி சாப்பிட்டேன் என்றதைக் கேட்டு  அதிர்ச்சியடைந்தனர்.  இதையடுத்து அவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாம்பை பிடித்து வீடியோ வெளியிட்ட பெண் கைது !

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
Woman caught holding snake and posted video arrested

கோவையில் பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் சேர்ந்து வனப்பகுதியில் சாரைப் பாம்பைக் கையில் பிடித்தபடி வீடியோ வெளியிட்ட நிலையில் அவரை வனத்துறை அதிகாரிகள்  கைது செய்துள்ளனர்.

அண்மையில் சமூக வலைத்தளத்தில் ஆண், பெண் இருவரும் வனப்பகுதியில் சாரைப் பாம்பை கையில் பிடித்தபடி பேசும் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் கையில் பாம்பை பிடித்துக்கொண்டு பேசிய பெண், 'விவசாயியின் தோழனாக இருக்கும் நண்பனான பாம்பை அடித்துக் கொள்ளாதீர்கள்' என விழிப்புணர்வு  கொடுப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கோவை  புளியகுளம் பகுதியில் எட்டுஅடி நீளம் கொண்ட சாரை பாம்பை பிடித்து வீடியோ வெளியிட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அப்போது நல்லெண்ண அடிப்படையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தான் நாங்கள் வீடியோ வெளியிட்டோம் என அந்த பெண் கூறியுள்ளார். இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வனத்துறையினர் ஜாமீனில் விடுவித்தனர். இதுபோன்று பாம்பு உள்ளிட்ட உயிரினங்களைப் பிடித்து அதை வைத்து வீடியோ வெளியிடக் கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.