Skip to main content

ஆன்லைன் சூதாட்டத்தால் திருமணம் ரத்து... உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை!

Published on 02/01/2022 | Edited on 02/01/2022

 

Young man commits... after losing money in online gambling

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது கூவாகம் நத்தம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமானுஜம் என்பவரது மகன் 27 வயது குமாரவேலு. இவர் அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் கேபிள் டிவி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் மூலம் ரம்மி சூதாட்டம் விளையாடுவதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அந்த சூதாட்ட கும்பல் முதலில் ஒரு ஆயிரம் இரண்டாயிரம் பணத்தை போனஸ் என்ற பெயரில் குமாரவேலு வங்கிக் கணக்கிற்கு அனுப்பி சூதாடுவதற்கு ஆசையைத் தூண்டி உள்ளது. அதன் பிறகு இவர் சூதாட்டத்தில் விளையாட ஆரம்பித்துள்ளார். இதனால் அவ்வப்போது பணத்தை இழந்தும் வந்துள்ளார்.

 

சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீண்டும் பெற்றே தீருவது என்ற பிடிவாத எண்ணத்துடன் உறவினர்கள், நண்பர்கள் என்று பலரிடமும் கடன் பெற்று அந்தப் பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இந்தநிலையில் குமாரவேலுவின் பெற்றோர் அவர்களதுஉறவினர் பெண் ஒருவரை குமாரவேலுக்கு திருமணம் செய்வதற்காகப் பேசி முடிவு செய்துள்ளனர். திருமணம் செய்யப்போவதை காரணம் காட்டி மேலும் பலரிடம் கடன் பெற்றுள்ளார் குமாரவேலு. அந்தப் பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இந்தத் தகவல் பெண் வீட்டாருக்கு தெரிய வரவே குமாரவேலுவுக்கு பெண் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் மனம் உடைந்த குமாரவேலு சில தினங்களுக்கு முன்பு வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரது உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்குச் சேர்த்து உடல்நிலை தேறி வீடு திரும்பியுள்ளார். அதன் பிறகாவது அந்த சூதாட்ட போதையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் குமாரவேலு ஆன்லைன் சூதாட்டத்தில் ரம்மி விளையாடுவதில் தீவிரமாக இருந்துள்ளார்.

 

இவரது செயலை கண்டு இவருக்கு யாரும் பணம் கொடுக்க முன்வரவில்லை. இந்தநிலையில் தனது உறவினர் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தை இரவல் வாங்கி அதை அடமானம் வைத்து அந்தப் பணத்தையும் சூதாட்டத்தில் இழந்துள்ளார். அதனால் குமாரவேலுக்கு 4 லட்சம் வரை கடன் அதிகரித்தது பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனம் உடைந்த குமாரவேலு சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை, அவரது பெற்றோரும் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் நேற்று திருவெண்ணைநல்லூர் மலட்டாறு பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார் குமாரவேல். அவரது சட்டைப்பையில் 'என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன்காரன் ஆனதால் அதிலிருந்து மீள முடியாமல் வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் குமாரவேல். இந்த தகவல் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமாரவேல் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில்  பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்கிறது. எனவே தமிழக அரசு இப்படிப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கு உரிய சரியான முடிவு எடுக்க வேண்டும். இல்லையேல் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.