Skip to main content

பெண்ணை நூதன முறையில் ஏமாற்றிய வாலிபர் கைது!

Published on 15/07/2021 | Edited on 15/07/2021
Young man arrested for cheating on woman

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ளது சிங்கனூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் மோகன் தாஸ். இவரது மனைவி 50 வயது பரமேஸ்வரி. இவர் கடந்த மாதம் 26ஆம் தேதி திண்டிவனம் நேரு வீதியில் உள்ள ஒரு ஏடிஎம் சென்டருக்கு பணம் எடுப்பதற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் பரமேஸ்வரியிடம் ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதாக கூறி அவரது ஏடிஎம் கார்டை வாங்கிப் ஏடிஎம் மிஷிஷினில் போட்டு பார்த்துவிட்டு பணம் வரவில்லை எனக்கூறி அந்த கார்டை பரமேஸ்வரி இடம் திருப்பிக் கொடுத்துள்ளார்.

 

அன்று மாலை பணம் எடுக்காமலேயே பரமேஸ்வரியின் செல்போன் எண்ணுக்கு அவரது வங்கிக் கணக்கிலிருந்து ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பத்தாயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அப்போதுதான் தன்னிடம் பணம் எடுத்துத் தருவதாக கூறி ஒரு இளைஞர் தன்னிடம் இருந்து வாங்கிய ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து அவன் ஏமாற்றியது அவருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து பரமேஸ்வரி திண்டிவனம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்த நிலையில் நேற்று மாலை திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தராசன் சந்தேகத்திற்கிடமாக அப்பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தார் அவரது விசாரணையில் அந்த இளைஞர் திருக்கோயிலுக்கு அருகில் உள்ள கூவனூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் 33 வயது மணிகண்டன் என்று தெரிய வந்தது. மேலும் பரமேஸ்வரி ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்து விட்டு அவரது கார்டை பயன்படுத்தி நூதன முறையில் பணம் எடுத்ததை மணிகண்டன் ஒப்புக் கொண்டுள்ளார்.

 

போலீசார் அவர்  மீது வழக்கு பதிவு செய்து திண்டிவனம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மணிகண்டனை சிறையில் அடைத்துள்ளனர். படிப்பறிவற்ற அப்பாவி மக்களின் ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொடுத்துவிட்டு அவர்களது கார்டை பயன்படுத்தி பணம் திருடும் கும்பல் அதிகரித்து வருகிறது. போலீசாரும் அவ்வப்போது அப்படிப்பட்ட நபர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனாலும் இந்த நூதன மோசடி தொடர்கிறது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.