Skip to main content

நீ இன்னைக்குத் தான் வந்திருக்க... வங்கி காசாளர் மீது மனைவி கொடுத்த புகார்... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

இளம்பெண் கொடுத்த அந்த புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதியரசர் ஜி.ஆர்.சாமிநாதன், "ஏன் இதை தீவிரமாக விசாரிக்கவில்லை' என்று காவல்துறையை எச்சரித்தார். பின்னர், அந்த புகைப்படங்களை எடுத்த வங்கி அதிகாரி எட்வின் ஜெயக்குமாரின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்தார். மேலும், 24 மணி நேரத்திற்குள் எட்வின் ஜெயக்குமாரை கைதுசெய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

புகைப்பட ஆதாரங்கள் மூலம் ஜெயக்குமாரின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்து, அவரை கைதுசெய்யக் காரணமான அந்த இளம்பெண் ஜெயக்குமாரின் மனைவி என்று தெரியவந்தது. அவரிடம் இது குறித்து நாம் விசாரித்தபோது, நான் தஞ்சாவூரைச் சேர்ந்தவள். கடந்த டிசம்பர் மாதம் எனக்கு திருமணம் நடந்துச்சு. கணவர் எட்வின் ஜெயக்குமார் விராலிமலையில் உள்ள வங்கியில் காசாளராக இருக்கிறார்.

 

incident



கல்யாணம் ஆன அடுத்த சிலநாளில், ரீட்டா என்பவரை தனது தூரத்து உறவுக்காரப் பெண் என்று அழைத்து வந்து, "இவர் இனி இந்த வீட்டில்தான் தங்குவார்' என்றும் கணவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்துச்சு.

அதுமட்டுமல்லாம, வீட்டுக்கு லேட்டாக நடுராத்தியில வருவார். அதுக்குப்பிறகும் செல்போனில் தொடர்ச்சியா பேசிக்கிட்டேயிருப்பார். ஒருநாள் எதேச்சையாக அவருடைய செல்போனை பார்த்தபோது, அவருடைய நிர்வாணப் படங்களையும் பெண்களுடன் அவர் நிர்வாணமா இருக்கும் படங்களையும் பார்த்தேன்.

அவர் வேலைக்குப் போனபிறகு, வீட்டிலிருந்த பீரோவில் பார்த்தபோது 15-க்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்துச்சு. அதில், வங்கிக்கு வரும் பெண்களை விதவிதமாக அவர் படமெடுத்து இருப்பதையும், அந்த ஏரியா பெண்களுடன் அசிங்கமாக படம் எடுத்திருப்பதையும் பார்த்து நொந்துபோயிட்டேன். பல பெண்களுடன் அசிங்கமாக வாட்ஸ் ஆப்பில் சாட்டிங் செய்துள்ளதையும் பார்த்தேன். சில பெண்களுக்கு அசிங்கமாக குறுஞ்செய்திகளும் வீடியோக்களும் அனுப்பியிருந்தார்.

அதில், தேவிபிலோமினாள் என்ற பெண்ணுக்கு போன் போட்டு, "ஏன் இப்படி என் புருஷனிடம் பேசுற, இது அசிங்கம் இல்லையா?'ன்னு கேட்டேன். அதுக்கு அவ சிரிச்சுகிட்டு, "நான் மட்டும் இல்ல... உன் புருஷனோட நிறைய பெண்களுக்கு தொடர்பு இருக்கு. அவரு எங்களை விட்டுப் பிரிந்து போகமாட்டாரு. நீ இன்னைக்குத் தான் வந்திருக்க. நான் பலமுறை நீ இருக்குற வீட்டுக்கு வந்திருக்கேன். இதை பெரிசுபடுத்தாம இருந்தா உனக்கு நல்லது'ன்னு சொன்னபோது எனக்கு தலையே சுற்றியது.

புவனா என்பவருடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தில் அவர் கர்ப்பமடைந்த விபரமும், அதை கலைக்க சொல்லி என் கணவர் கட்டாயப்படுத்திய வாட்ஸ்அப் தகவல்களும் இருந்துச்சு.


வங்கியில் பணம் செலுத்த வரும் பெண்களை குறிவைத்து அவர்களை வசியப்படுத்துவதற்காகத் தான் காசாளர் பணியிலிருந்து உயர் பதவிக்கு மாறாமல் இருக்கிறார் என்பது தெரிந்தது. ஞானரோசி, விமலா, லட்சுமி, தமிழ்ச்செல்வி, மரியா, சிட்டு, அகிலா என பல பெண்கள் என் கணவருடன் தொடர்பில் இருக்குறாங்க.

என் வீட்டுக்கு அருகே இருக்கும் பெண்களையும் ஆபாசமா படம் எடுத்து வச்சிருக்கிறார்.

இந்த வீடியோ, போட்டோக்கள் பற்றி அவரிடம் கேட்டபோது, "நான் இப்படித்தான் இருப்பேன். அவுங்க என்னுடைய தோழிகள். நான் என் இஷ்டத்துக்குதான் நடப்பேன். இதைப்பற்றி வெளியே யாரிடமும் சொன்னா உன்னை கொலை செய்துடுவேன். உனக்குத் தெரியாமல் உன்னையே நான் படம் எடுத்து வச்சிருக்கிறேன். நீ குளிக்கும்போது உனக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வச்சிருக்கிறேன். என்னைப் பற்றி ஏதாவது பேசினா அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன்' என மிரட்டிக்கிட்டே இருந்தார்.

ஒரு பக்கம் இப்படி கணவனின் வக்கிரமான செயல், இன்னொரு பக்கம் மாமியார், நாத்தனார் வரதட்சணைக் கொடுமை இரண்டு பக்கமும் கொடுக்கும் டார்ச்சரால் நரக வேதனையை அனுபவித்தேன்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில, யாருமில்லாத மலைப்பகுதிக்கு என்னை அழைச்சிக்கிட்டு போனார். உயிருக்கு ஆபத்துன்னு மனசுக்குப் பட்டதால அங்கிருந்து தப்பிச்சு என் அம்மா வீட்டிற்கு வந்துட்டேன்.

அம்மா, அப்பாவுடன் தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதனிடம் புகார் கொடுத்தேன். அவர் வல்லம் மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பி விசாரித்து, அவர் மீது 498, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இதற்குப் பயந்துதான் முன்ஜாமீன் கேட்டார். அதுக்கு எதிராக நான் மனு போட்டு, அவரை உள்ளே தள்ளினேன்' என்றார் ஆத்திரமும் அழுகையுமாக.

இதுகுறித்து வங்கி வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, "அவர் மேல நிறைய புகார் இருக்கு. விராலிமலை காவல் நிலையத்தில் செமத்தியா வாங்கியிருக்கிறார். ஆனால் அதையெல்லாம் சரிக்கட்டி வெளியே வந்துவிட்டார்'' என்கிறார்கள்.

-ஜெ.தாவீதுராஜ்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.