Skip to main content

உலக சுற்றுச்சூழல் தினம்; மரக்கன்றுகளை நட்ட அமைச்சர் (படங்கள்)

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ரெபெக்ஸ் குரூப் ஆப் கம்பெனிஸ் (Refex Group of companies) சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 10 ஆயிரம் மரக்கன்றுகளை மேயர் பிரியா ராஜனிடம் வழங்கினர். இந்த மரக்கன்றுகளை நடும் விழாவானது சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மரக்கன்றை நட்டார். சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன், துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்