Skip to main content

நல்லவன்னு நினைச்சேன்... இப்படி பண்ணிட்டான் சார்... பெண் கண்ணீர் புகார்: மோசடி நபர் கைது

Published on 17/08/2018 | Edited on 17/08/2018
Woman complained


சென்னை நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயது பெண் கலைவாணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நந்தம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அப்போது அவர் போலீசாரிடம் சில விசயங்களையும் கூறியுள்ளார். பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருந்த தான், பலருடன் நட்பு வைத்திருந்ததாகவும், அந்த வகையில் மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த சசிகாந்த் சிவாஜி(வயது 38) என்பவருடன் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியது. கடந்த 2½ ஆண்டுகளாக பேஸ்புக் மூலம் காதலித்துள்ளார்.

 

 


இருவரும் திருமணம் செய்துகொள்வதாக முடிவு எடுக்கின்றனர். இதனால் நேரில் சந்திக்க வேண்டும் என்பதால் கோவாவில் சந்தித்துள்ளனர். அப்போது ஆசை வார்த்தை கூறி, தனத ஆசைக்கு இணங்க வைத்திருக்கிறார் சசிகாந்த் சிவாஜி. அதன் பின்னரும் பலமுறை பல்வேறு இடங்களில் இருவரும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. 
 

பின்னர் சசிகாந்த் சிவாஜி, தனியாக தொழில் தொடங்கினால் திருமணத்திற்கு பிறகு இரண்டு பேர் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் எனவே அதற்கு 10 லட்சம் தேவைப்படும் என்று ஆசை வார்த்தை பேசி, கலைவாணியிடம் 10 லட்சத்தை பெற்றுள்ளார். பணம் பெற்றுக்கொண்டு சென்ற சசிகாந்த் சிவாஜி, அதன் பின்னர் கலைவாணியை தொடர்புகொள்ளவே இல்லை. பேஸ்புக் தொடர்பையும் துண்டித்துவிட்டார். கோவா உள்ளிட்ட இடங்களில் இருவரும் தனியாக இருந்தபோது, சசிகாந்த் சிவாஜியின் பர்ஸ், பேக் உள்ளிட்டவற்றில் இருந்த முகவரிகளை சேகரித்து வைத்திருந்தார் கலைவாணி. அந்த முகவரிக்கு சென்று விசாரிக்கலாம் என்று கலைவாணி புனேவுக்கு சென்று சசிகாந்த் சிவாஜி பற்றி விசாரித்துள்ளார். 
 

 

 

அங்குதான் கலைவாணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. சசிகாந்த் சிவாஜிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதும், தன்னிடம் இருந்து ரூ.10 லட்சத்தை வாங்கி சசிகாந்த் சிவாஜி மோசடி செய்துவிட்டதும் தெரிந்து மிகப்பெரிய மனஉளைச்சலுக்கு ஆளானார்.

பின்னர் சென்னை திரும்பிய கையோடு, நந்தம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். நல்லவர் போல்தான் பழகினான். அதனால்தான் காதலித்தேன். இப்படி நாசம் பண்ணுவான்னு நான் கனவில் கூட நினைக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் புகார் அளித்தார். புகாரின் பேரில் தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி, பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி ஆகியோர் உத்தரவின்பேரில் பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் மோகன்தாஸ் தலைமையில் நந்தம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், ஏட்டுகள் பாலாஜி, அல்போனஸ், மகேஸ்வரன், தினகரன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
 

தனிப்படையினர் புனேவுக்கு சென்று சசிகாந்த் சிவாஜியை கைது செய்தனர். சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவரிம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.  இதுபோன்று சமூகவலைத்தளம் மூலம் வேறு பெண்களுடன் பழகி மோசடி செய்துள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இளம் பெண் ரயில் நிலையம் அருகே கொடூரக் கொலை; பின்னணி என்ன ?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
A young woman from Chennai was passed away near Gudiyattam railway station

வேலூர் மாவட்டம் குடியாத்தம், சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தீபா. 30 வயதான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் திருமணமாகி விவாகரத்து பெற்று தனது தாயாருடன் வசித்து வந்தார்.

கடந்த 14ஆம் தேதி அலுவல் காரணமாக குடியாத்தம் சென்று வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு வந்தவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. எங்கே போனாலும் மகள் தினமும் தன்னுடன் பேசிவிடுவார் அப்படி இருக்க செல்போன் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். தன்னையும் தொடர்பு கொள்ளவில்லை என்பதால் அவர் பயந்து போனார்.

இதுகுறித்து அவரது தாயார் கடந்த 16ஆம் தேதி சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட புளியந்தோப்பு போலீசார் செல்போன் எண்களை ஆராய்ந்து அம்பத்தூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த குடியாத்தம் அடுத்த சின்ன நாகால் பகுதியை சேர்ந்த ஹேம்ராஜ் (25) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் கடையில் பணியாற்றி வந்த தீபா உடன் ஹேம்ராஜிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இளம் பெண்ணை தள்ளிவிட்ட வழக்கில் ஹேம்ராஜ் 11 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே இவரது மொபைல் எண்ணிற்கு தீபா குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசிய ஹேம்ராஜ் தான் ரயில்வேயில் பணிக்காக தேர்வுக்காக தயாராகி வருவதாகவும் நீயும் ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அதற்கான புத்தகங்கள் தன்னிடம் உள்ளதாக கூறி கடந்த 14ஆம் தேதி குடியாத்தம் ரயில்வே நிலையத்திற்கு தீபாவை ஹேம்ராஜ் வரவழைத்துள்ளார்.

இதனையடுத்து குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள மலையடிவாரத்திற்கு தீபாவை அழைத்துச் சென்று அங்கு தீபாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அங்கே இருவருக்கும் உருவான பிரச்சனையில் தீபா தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்னைக்குச் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து ஹேமராஜை கைது செய்த குடியாத்தம் போலீசார் கொலைக்கான காரணம் உண்மைதானா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் இருந்து ஒரு பெண்ணை கீழே தள்ளி கொலை குற்ற வழக்கில் சிறையில் இருந்தவன், ரயில்வே தேர்வு எழுதுகிறேன் என ஒரு படித்த பெண்ணிடம் சொல்ல இதை அவர் எப்படி நம்பினார்? இவன் சொல்வது உண்மையான காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னையில் காணாமல் போன இளம் பெண் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்