தமிழகம் முழுவதும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் அனுமதி இல்லாத அரசு மதுபானக்கடைகள், பார்கள் மூடப்பட்டுள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் பல இடங்களில் அரசு மதுபானக்கடையில் பார்கள் அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது அதுவும் 24 மணி நேர சேவை என்ற கணக்கில் விற்பனை அமோகமாக உள்ளது.
கோவை பொள்ளாச்சி மெயின் ரோட்டில் மலுமிச்சம்பட்டி அடுத்து ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் பல்லடம் செல்லும் பைபாஸ் சாலையில் அரசு மதுபானக்கடை (கடை எண் 1765) இயங்கி வருகிறது உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அரசு மதுபானக்கடை கடந்த 2 மாதத்திற்கு முன்பாகவே எடுத்துவிட்டனர்.
ஆனால் அங்குள்ள பார் இன்னும் எடுக்கப்படாமல் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. விற்பனையும் அமோகமாக உள்ளது இந்த பார் மூடக்கோரி செட்டிபாளையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பைபாஸ் ரோட்டில் உள்ள அரசு மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் அனைத்தையும் மூடும்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அதையும் மீறி சட்டத்தை மதிக்காமல் கடை எண் 1765 அரசு மதுபான கடை செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மக்களின் தீவிர போராட்டம் காரணமாக கடை மூடப்பட்டது. ஆனால் அங்குள்ள பார் மட்டும் இன்னும் மூடாமல் செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் அப்பகுதியில் உள்ள சில அரசியல்வாதிகளின் ஆதரவால் 24 மணி நேரமும் பாரில் அமோக விற்பனை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பலமுறை நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்கள். இந்த பாரின் அருகிலேயே 2 தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளது. அப்பள்ளிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்கள் இந்த வழியாகத்தான் பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுமதி இல்லாத அரசு டாஸ்மாக் கடைகளில் 24 மணி நேரமும் விற்பனை அமோகம்!
சார்ந்த செய்திகள்
Next Story
குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்
கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.
தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்
குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.
குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .
அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.
வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.