Skip to main content

மனைவியை கழுத்து அறுத்து கொன்ற கூலித்தொழிலாளி!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

wife and husband incident namakkal police investigation

 

நாமக்கல் அருகே பலமுறை கண்டித்தும் ரகசிய காதலனுடனான தொடர்பைக் கைவிடாததால் ஆத்திரத்தில் மனைவியைக் கழுத்தறுத்துக் கொலைசெய்த கூலித்தொழிலாளியைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

 

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள நவணியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 25), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (வயது 22). காதலித்துவந்த இவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். நந்தினியின் சொந்த ஊர், நாமக்கல் அருகே உள்ள பாப்பிநாயக்கன்பட்டி ஆகும். 

 

இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த சில மாதங்களாக நந்தினி, செல்ஃபோனில் வேறொரு வாலிபருடன் நீண்ட நேரம் பேசிவந்துள்ளார். அவரை ரகசியமாகக் கண்காணித்துவந்த கணவன், உள்ளூரைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் மனைவிக்குத் தவறான தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தார்.

 

இதையடுத்து தமிழ்செல்வன், தவறான தொடர்பை கைவிட்டுவிடும்படி மனைவியைக் கண்டித்துள்ளார். அப்போதைக்குக் கணவனுக்கு அடங்கி நடக்கும் மனைவிபோல கேட்டுக்கொண்ட நந்தினி, கணவர் இல்லாத நேரங்களில் தன் ரகசிய காதலனை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். 

 

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (05.12.2021) காலையில் தமிழ்செல்வன், அவசர வேலை காரணமாக வெளியே சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தது போல நந்தினி, உடனடியாக தன் ரகசிய காதலனை வீட்டுக்கே வரவழைத்து அவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். 

 

திடீரென்று வீட்டிற்கு வந்த கணவன், மனைவியும், அவருடைய ரகசிய காதலனும் இருந்த கோலத்தைப் பார்த்து ஆத்திரமடைந்தார். இதை எதிர்பாராத அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். 

 

ஆத்திரத்தில் இருந்த தமிழ்செல்வன், மனைவியை சரமாரியாகத் தாக்கினார். மேலும், வீட்டில் இருந்த அரிவாளால் மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் நந்தினி நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

 

மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதைத் பார்த்த தமிழ்செல்வன், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் காவல் நிலைய காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

 

சடலம், உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், தலைமறைவான தமிழ்செல்வனை தேடிவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

“வலி தாங்க முடியவில்லை” - மனைவி அடிப்பதால் கணவன் தற்கொலை முயற்சி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Husband try lost their life due to wife beating in Hyderabad

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே  வசித்து வருபவர் நாகேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாகேஷ் திடீரென்று ஜெயப்பேரி பூங்காவில் இருக்கும் ஏரியில் தற்கொலை செய்வதற்காக இறங்கி உள்ளார். எனக்கும், என் மனைவிக்கும் விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்று கத்திக் கொண்டே ஏரியில் நாகேஷ் இறங்கி இருக்கிறார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  அங்கிருந்தவர்கள் நாகேஷை ஏரியை விட்டு வெளியேறுமாறு கூச்சலிட்டு உள்ளனர். ஆனால் நாகேஷ் ஏரியை விட்டு வெளியே வர மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் கழித்து அங்கிருந்த மக்களே ஏரியில் குதித்து  நாகேஷை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

பின்பு நாகேஷிடம் ஏன் தற்கொலை செய்ய முயற்சி செய்தீர்கள் என்று விசாரித்ததில், என் மனைவி என்னை தினமும் அடிக்கிறாள்; என்னால் வலி தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். என் குழந்தைகளிடம் கூட என்னை பேச அனுமதிப்பதில்லை. அவர்களிடம் அப்பா இறந்துவிட்டடாக கூறியிருக்கிறாள். அவள் என்னை சித்திரவதை செய்கிறாள். எனக்கும் என் மனைவிக்கும் விவகாரத்து வாங்கிக் கொடுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன்” என்று வேதனையோடு கூறியிருக்கிறார். இதனை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இது வேகமாக பரவி வருகிறது.