Skip to main content

புயல் கரையை கடக்கும்போது என்ன செய்ய வேண்டும்? தேசிய பேரிடர் ஆணையம் அறிக்கை

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
storm



புயல் கரையை கடக்கும்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தேசிய பேரிடர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 

புயல் வருவதற்கு முன்பு சமூக வலைதளங்களில் வரும் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.
 

தகவல்களை செய்தித்தாள், செய்தி இணையதளங்கள் மற்றும் தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொள்ளலாம். 
 

ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, கல்விச் சான்று உள்ளிட்ட வீட்டில் முக்கிய ஆவணங்கள் இருந்தால் தண்ணீரில் நனையாமல் இருக்கும்படி பாலிதீன் கவர் கொண்டு மூடி வைத்து பாதுகாக்க வேண்டும். 
 

அதிகமான மழை ஏற்பட்டால் வெளியே போக முடியாத சூழல் ஏற்படும் என்பதால் சில நாட்களை கழிக்க தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். 
 

புயல் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் வெளிச்சத்துக்கு தேவையான பேட்டரி போன்ற மாற்று ஏற்பாடுகள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். 
 

தகவல் தொடர்பு இல்லாமல் போகும்போது டிரான்சிஸ்டர், ரேடியோ போன்றவை பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
 

மொபைல் போன்களில் சார்ஜ் இருக்குமாறும், சார்ஜ் செய்ய ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். மேலும் போதுமான அளவு பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். 
 

புயல் வரும் நேரத்தில் வசிக்கும் இடம் பழைய வீடாகவோ, அல்லது பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வீடாக இருந்தாலோ முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டம். 
 

வீட்டில் உள்ளவர்களைப்போலவே, கால்நடைகள் மற்றும் விலங்கினங்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவேண்டும். 
 

முக்கியமாக கடலோர மக்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்குள் செல்லாமல் இருப்பது அவசியம். 
 

புயல் கரையை கடக்கும்போது வீட்டுக்குள் அல்லது பாதுகாப்பு மையத்தில் இருப்பது முக்கியமானது. கதவுகள், ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டில் உள்ள மின் இணைப்புகள், சமையல் கேஸ் இணைப்புகளை அணைத்து வைக்க வேண்டும். 
 

புயல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வது அவசியம். மேலும் அரசின் உதவி மையத்துடன் தொடர்பில் இருந்தால் பயன் அளிக்கும். 
 

கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரையே குடிக்க வேண்டும். மேலும் புயலுக்கு பிறகு தொற்று நோய்கள் பரவும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கையில் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும். 
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

Next Story

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Tuticorin fishermen banned from going to sea
கோப்புப்படம்

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதே சமயம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த முன்னறிவிப்பில், ‘தென் தமிழக கடலோரப் பகுதிகள். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜனவரி 11 ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் விடுத்திருந்த எச்சரிக்கையின் படி, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சுமார் 300 விசைப் படகுகளும், 2 ஆயிரம் நாட்டுப் படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.