Skip to main content

ரேஷன் கடையில் வேலை வேண்டுமா? பிளஸ்2, எஸ்எஸ்எல்சி படித்தவர்களுக்கு வாய்ப்பு

Published on 14/10/2022 | Edited on 14/10/2022

 

Want a job in a ration shop? Opportunity for Plus2, SSLC graduates!

 

ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

 

சேலம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 236 விற்பனையாளர், 40 கட்டுநர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் அக். 13ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆள்சேர்ப்பு மையம் அறிவித்துள்ளது. நவம்பர் 14ம் தேதி வரை விண்ணப்பம் பெறப்படுகிறது. விற்பனையாளர் பணிக்கு பிளஸ்2 தேர்ச்சியும், கட்டுநர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதியைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. 

 

விற்பனையாளர் பணிக்கு 150 ரூபாயும், கட்டுநர் பணிக்கு 100 ரூபாயும் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும். கட்டண விலக்கு, இன்ன பிற தகுதிகள், சம்பள விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் www.drbslm.in என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இப்பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்றும், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜனவரி முதல் பணி ஆணை வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்