Skip to main content

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; மூன்று வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Vikravandi by-election; Mechanical failure in three polling stations

திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கே தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன. திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் அக்கட்சி நிர்வாகியான அன்புமணியும், நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவன் என்ற பெண் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். மொத்தம் 2.37 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நெமூரில் உள்ள வாக்குச்சாவடியில் பெண்கள் மட்டும் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவிற்காக 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 41 வாக்குச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. விக்கிரவாண்டி மட்டுமல்லாது நாடு முழுவதும் மொத்தம் 13 பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

விக்கிரவாண்டியில் விறுவிறு என வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் 3 வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாகி உள்ளது. விக்கிரவாண்டி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் குளவி கூட்டத்தால் வாக்குபதிவின் போது இடையூறு ஏற்பட்டது. அதனால் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மருந்து தெளித்து குளவியை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மருந்து தெளித்ததின் விளைவாக ஏற்பட்ட நெடியால் அங்கிருந்த அலுவலர்கள் மற்றும் வாக்காளர்கள் சிறிது நேரம் வெளியே இருந்தனர். இந்நிலையில் ஒட்டன் காடுவெட்டி, மாம்பழப்பட்டு, காணை ஆகிய 3 வாக்குச்சாவடிகளில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் நீண்ட நேரமாக வாக்காளர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்