Skip to main content

மாணவிகளை எரித்து கொலை செய்தவர்களை விடுதலை செய்த ஆளுநர் 7 பேரை ஏன் விடுதலை செய்யவில்லை: விஜயகாந்த்

Published on 21/11/2018 | Edited on 21/11/2018
vijayakanth



அப்பாவி மாணவிகள் பேருந்தில் பயணித்த போது, உயிரோடு பேருந்தில் வைத்து எரித்து கொலை செய்த அதிமுக நிர்வாகிகள் மூன்று பேரை தமிழக அரசின் சிபாரிசுடன் விடுவித்த ஆளுநர், பேரறிவாளன் உள்பட ஏழு பேரை ஏன் விடுதலை செய்யவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மூன்று மாணவிகளை உயிரோடு எரித்து கொல்லப்பட்ட அதிமுகவை சேர்ந்த மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். 
 

ஜெயலலிதா கொடைக்கானல் பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டார் என்ற ஒரே காரணத்திற்காக, அப்பாவி மாணவிகள் பேருந்தில் பயணித்த போது, உயிரோடு பேருந்தில் வைத்து எரித்து கொலை செய்த அதிமுக நிர்வாகிகள் மூன்று பேரை தமிழக அரசின் சிபாரிசுடன் விடுவித்த ஆளுநர், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்பட மொத்தம் ஏழு பேரை ஏன் விடுதலை செய்யவில்லை. 
 

சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறைதண்டனை அனுபவித்து வரும் இந்த ஏழுபேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரை விடுவிக்க ஒப்புதல் வழங்காத தமிழக ஆளுநர், கல்லூரி மாணவிகளை பேருந்தில் வைத்து உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட அதிமுக வின் நிர்வாகிகள் மூன்றுபேரை மட்டும் விடுதலை செய்திருப்பது, ஆளும் அரசின் நிர்பந்தமா, இல்லை, மத்திய அரசின் அரசியல் நிர்பந்தமா என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். 
 

ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறு கண்ணில் வெண்ணெய் என்பது போல் இந்த விடுதலை அமைந்துவிடும். அதிமுகவினர் மூன்று பேரை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்ததுபோல், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு மெத்தனமாக இல்லாமல் விரைந்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.    

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.  

Next Story

விஜயகாந்த் மறைந்து 100ஆவது நாள் - கண்ணீருடன் பிரேமலதா அஞ்சலி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024

 

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்திற்கு இன்றும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்த் மறைந்து இன்றோடு 100 நாள்கள் நிறைவைடைகிறது. இதையொட்டி பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மகன் சண்முகபாண்டியன் உடனிருந்தார். அவருக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்