Skip to main content

ரவுடி பல்பு குமாரை கொலை செய்த ரவுடி சொறி விஜய்!

Published on 06/12/2017 | Edited on 06/12/2017
ரவுடி பல்பு குமாரை கொலை செய்த ரவுடி சொறி விஜய்!



சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தை சேர்ந்த சில குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் ஆன சொறி விஜய், பல்பு குமார் இருவரும் நெருங்கிய நண்பர்கள், கடந்த ஒரு வருடத்திற்கு முன் பல்பு குமார், சொறி விஜயிடம் போதையில் மேலும் சாராயம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளான் அந்த வேலையில் சொறி விஜய் மைதானத்தில் இருந்த விஷமில்லா குட்டி பாம்பை பிடித்து விளையாட்டாக பல்புகுமார் மீது விட்டான். பாம்பை கண்ட பயத்தில் பல்புகுமார் கீழே விழுந்தான்.

இதை பார்த்து சுற்றியிருந்த பொதுமக்கள் சிரித்து விடவே அவமானம் தாங்க முடியாமல் பல்பு குமார், சொறி விஜயை தாக்கவே இருவருக்கும் நடந்த கடும் மோதல் முற்றி இருவரும் பகையாளி ஆனார்கள். இந்தநிலையில் ஜாம்பஜார் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கைதானார்கள்.

பின்னர் வெளிவந்த இருவரும் எதிர் எதிர் கோஷ்டியாக செயல்பட்டு வந்தார்கள். பல்புகுமார் மீது சொறிவிஜய் ஆட்கள் கொலை செய்ய நடந்த முயற்சியில் வெட்டு காயங்களுடன் பல்புகுமார் தப்பினான். பின்னர் தன் வீட்டை பட்டிணம்பாக்கம் சீனிவாசா நகருக்கு மாற்றிக்கொண்டான்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கொலை வழக்கு சம்மந்தமாக சொறி விஜய் சிறையில் அடைக்கப்படவே மீண்டும் திருவல்லிக்கேணி பகுதியில் பல்புகுமார் சுற்றிதிரிந்தான். இந்தநிலையில் நேற்று இரவு திருவல்லிக்கேணி கடற்கரை ஓரம் உள்ள விக்டோரியா கல்லூரியில் வைத்து சொறி விஜயின் ஆட்கள் பல்புகுமாரை நிர்வாணப்படுத்தி கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.

பின்னர் தகவல் அறிந்த அண்ணா சதுக்கம் போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து கொலையில் தொடர்புடைய சொறி விஜயின் கூட்டாலியான பிரசாந்தை தேடிவருகிறார்கள். ஒரு விளையாட்டு வினையானது.

- அரவிந்த்

சார்ந்த செய்திகள்