Skip to main content

வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இரவு காவலர் பணி !

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இரவு காவலர் மற்றும் மசால்ஜி உள்ளிட்ட 15 பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை தலைமை நீதிபதி நடுவர் அவர்கள் வெளியிட்டார் . இதில் இரவு காவலர் பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Court Job


 

ஏனென்றால் இரவு காவலர் பணியில் பெண்கள் அமர்த்தக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை  மாவட்ட நீதித்துறை நீதிமன்றத்தின் இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் . இதற்கான இணையதள முகவரி : https://districts.ecourts.gov.in/vellore ஆகும் . அதே போல் பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்களையும் ( Self Attestation) உடன் கீழ்காணும் முகவரிக்கு 16/05/2019 அன்று மாலை 5.45 க்குள் சுய விலாசமிட்ட ரூபாய் 25/ அஞ்சல் வில்லையை ஒட்டி  பதிவு செய்யப்பட்ட தபாலில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் .



விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
"தலைமை நீதித்துறை நடுவர்,
தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ,
வேலூர் - 632 009".



இதற்கான கல்வி தகுதி தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தால் போதுமானது . இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 ஆகும் . இதில் தேர்வு செய்யப்படுவோர்களின் மாத ஊதியம் ரூபாய் 15,000- 50,000 வரை பெறுவார்கள் . இந்த பணியிடங்கள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு இணைய தள முகவரி : https://districts.ecourts.gov.in/vellore அணுகவும் .

 

 

 

சார்ந்த செய்திகள்