Skip to main content

வக்பு வாரிய தேர்தலை நடத்த வேண்டும்! ம.ஜ.க. வேண்டுகோள்!

Published on 26/02/2018 | Edited on 26/02/2018


 

வக்பு வாரிய தேர்தலை நடத்த வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் பதவிக்கு இன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று மாலை அதனை ரத்து செய்வதற்தாக அறிவிப்பு செய்துள்ளது ஏமாற்றமளிக்கிறது.
 

 இந்தியாவில் இரயில்வே, ராணுவம் ஆகியவற்றுக்கு அடுத்த படியாக சொத்துக்களை கொண்ட மிகப்பெரிய நிர்வாக அமைப்பாக வக்பு வாரியம் நிகழ்கிறது. தமிழ்நாட்டில் அரசர்களும், பொதுமக்களும், செல்வந்தர்களும், பொதுநல காரியங்களுக்காகவும், இஸ்லாமிய ஆன்மிக பணிகளுக்காகவும் தானம் செய்யப்பட்ட சொத்துக்களை தமிழ்நாடு வக்பு வாரியம் பராமரித்து விடுகிறது.
 

 இதற்கு நீண்ட காலமாக தலைவர் இல்லாமல் இப்பதால், பல பள்ளிவாசல்கள் மற்றும் தர்ஹாக்களின் நிர்வாக செயல்பாடுகள் முடங்கி கிடக்கின்றன, எனவே இவ்விஷயத்தில் தமிழக முதல்வர் கவனம் எடுக்க வேண்டும் என ஜமாத்தினர் எதிர்பார்க்கிறார்கள். உடனடியாக தமிழக அரசு மறு தேதியை அறிவித்து இத்தேர்தலை நடத்த வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
 இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

தஞ்சையில் பச்சைக்கொடி பேரணி! - காவிரி உரிமை மீட்புக்குழு அறிவிப்பு!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

 Green flag rally in Tanjore! -Cauvery Rights Rescue Committee announcement!

 

இன்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், திருவாரூரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ம.ஜ.க பொதுச் செயலாளர், எம்.எல்.ஏ மு.தமிமுன் அன்சாரி, விவசாயச் சங்க கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் காவிரி தனபாலன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் மருத்துவர் பாரதிமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

 

இதில், டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மத்திய அரசின் உழவர் ஒழிப்புச் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், எதிர்வரும் ஜனவரி 21 வியாழன் அன்று காலை, தஞ்சாவூரில் பிரம்மாண்ட பச்சைக் கொடி பேரணி நடத்துவது என்றும் முடிவானது.

 

அதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் இந்தச் சட்டங்களின் பாதகங்களை விளக்கி துண்டுப் பிரச்சார பரப்புரை நடத்துவது என்றும் முடிவுசெய்யப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்க முடியாதவர்களும், போராட்ட ஆதரவாளர்களும், வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களும், வெளிநாடுவாழ் தமிழர்களும் அன்று காலை சமூக இணையதள வழியான போராட்டங்களில் பங்கேற்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில், ம.ஜ.க மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில விவசாய அணிச் செயலாளர் அப்துல் சலாம், திருவாரூர் மாவட்டப் பொருளாளர் ஷேக் அப்துல்லா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெய்னுதீன், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் எரவாஞ்சேரி நஜ்முதீன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

 

 

Next Story

'நிவர்' புயல் எச்சரிக்கை பணிகள்! - தொகுதியை ஆய்வு செய்த தமிமுன் அன்சாரி!

Published on 24/11/2020 | Edited on 25/11/2020

 

sdf

 

நிவர் புயல் கரையை நெருங்கும் நிலையில், மக்களை முன்னெச்சரிக்கையாக மீட்கும் பொருட்டு, நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி இரண்டு நாட்களாக தொகுதி முழுக்கச் சுற்றி வருகிறார்.

 

திருமருகல் ஒன்றியம் மற்றும் திட்டச்சேரி பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தவர், தொடர்ந்து நாகை ஒன்றியத்தில் சுற்றுப்பயணம் செய்து முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்தியிருக்கிறார். மக்கள் தங்குவதற்கு, திருமண மண்டபங்கள், பள்ளிக் கூடங்களை ஏற்பாடு செய்ததோடு, ஒவ்வொரு ஊராட்சியிலும் மரம் அறுக்கும் இயந்திரம், பொக்லைன் இயந்திரம் ஆகியவை தயார் நிலையில் இருக்குமாறு வி.ஏ.ஒ மற்றும் ஊராட்சி செயலாளர்களைக் கேட்டுக் கொண்டது கிராமப்புற மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

 

gh

 

நாகை, நாகூர் நகராட்சிப் பகுதிகளில் சாக்கடை தூர்வாரல், மின் கம்பங்களைச் சீரமைத்தல் போன்ற பணிகளைத் தீவிரப்படுத்தி, நகராட்சி ஆணையரிடம் இப்பணிகள் குறித்தும் கேட்டறிந்து, மேல் நடவடிக்கைகளுக்கு உடனுக்குடன் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆங்காங்கே ரேஷன் கடைகளுக்கும் விசிட் செய்து பொருட்களின் வினியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அங்கு நின்ற மக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்துள்ளார். பிறகு கடலோர மீனவ கிராமங்களுக்குச் சென்று, அவர்களின் நிலைகளைக் கேட்டறிந்து, படகுகளைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திட அறிவுறுத்தியது மீனவர்களை நெகிழச் செய்துள்ளது.