சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே இன்று காலை கார் மீது லாரி மோதிய விபத்தில் காரில் இருந்தவர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்கள் கடலூர் அருகே மஞ்சகுப்பத்தைச் சேர்ந்த முபாரக், சிவக்குமார் என தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.