Skip to main content

இலங்கைக்கு கடத்திய விரளி மஞ்சள், பீடி இலை: பறிமுதல் செய்த கடலோரக் காவல் படையினர்.!

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

turmeric and beedi leaves smuggled into Sri Lanka; Seized by the Coast Guard.!

 

வெளிநாடுகளிலிருந்து சமையலுக்குப் பயன்படுகிற மஞ்சள், லாகிரி வஸ்துகள் போன்றவற்றை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இதனால் அங்கு இந்தியாவில் விளைகிற உணவுப் பொருள், மருத்துவ குணம் கொண்ட மஞ்சள் ஆகியவற்றுக்கு கடும் கிறாக்கி. இந்தியக் கரன்சியிலிருந்து இரண்டு மடங்கிற்கும் மேலான விலை கடத்தலில் கிடைக்கின்றன.

 

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட தென்னிந்திய பகுதியைச் சேர்ந்த மாஃபியாக்கள், தூத்துக்குடி வழியாக மேற்கண்ட பொருட்களை வல்லங்கள் மூலம் இலங்கைக்குக் கடத்திவருகின்றனர். ஆனாலும் முடிந்தவரை கடலோரக் காவல்படையினர் இவர்களை வேட்டையாடி வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய தினம் (20.05.2021) தூத்துக்குடி க்யூ பிரிவு இன்ஸ்பெக்டரான விஜய அனிதாவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், எஸ்.ஐ. ஜீவமணி உட்பட தனது டீமுடன் தூத்துக்குடி கடற்பகுதியில் கண்காணிப்பில் இருந்திருக்கிறார்.

 

turmeric and beedi leaves smuggled into Sri Lanka; Seized by the Coast Guard.!

 

அச்சமயம் அந்தப் பக்கமாக நின்றுகொண்டிருந்த லோடு ஆட்டோ ஒன்றிலிருந்து சிலர் படகுக்கு மூட்டைகளை மாற்றிக்கொண்டிருந்தனர். இவர்களைக் கண்டதும் அவர்கள் தப்பியோட, விஜய அனிதா டீம் அதனை சோதனையிட்டபோது 30 கிலோ எடை கொண்ட 28 மூட்டைகளில் 840 கிலோ மஞ்சள், 14 மூட்டைகளில் 420 கிலோ பீடி இலைகள் ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றைக் கைப்பற்றியுள்ளனர். அதோடு லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். அதன் பின் இந்த மூட்டைகளைக் கொண்டுவந்த லோடு ஆட்டோ ட்ரைவரான மேட்டுப்பட்டி உமர் அலி என்பவரைக் கைது செய்தனர்.

 

பிடிபட்டவையின் மதிப்பு இந்திய மதிப்பில் 20 லட்சத்திற்கும் மேலானது. இலங்கையில் தடை காரணமாக அங்கு விலை அதிகம் கிடைப்பதால் கடத்தல்காரர்கள் மஞ்சள், பீடி இலைகளைக் கடத்துகின்றனர். மேலும், கடத்தல் தொடர்பாக முகம்மது அசாரூதீன் என்பவரைத் தேடிவருவதாக க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட தரமான பீடி இலைகள், ஒடிஸா, சட்டீஸ்கர் மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.