Skip to main content

 6 எம்.பி.களை ஜெயிக்க வைத்த டெல்டா மக்களுக்கு நன்றி சொல்லும் ஸ்டாலின் ! 

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

 

மாவட்ட திமுக சார்பில் திருச்சியில் நன்றி தெரிவிக்கும் பொதுகூட்டம் இன்று திருச்சியில் நடைபெறுகிறது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த எம்.பி. தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெற்றனர். அது போல 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 சட்டமன்றத்தில் வெற்றிபெற்று உள்ளனர். இதன் பிறகு நன்றி அறிவிப்பு கூட்டம் மண்டலம் வாரியாக நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்திருந்தது. 

 

k

 

இதன் முதல்கட்டமாக சென்னையில் கலைஞர் பிறந்தநாள் அன்று நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று திருச்சி உழவர் சந்தையில் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்த கொள்வதற்காக திருச்சி வந்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். 


 இந்த கூட்டத்திற்கு வருகை தரும் திமுக தலைவர் ஸ்டாலினை கே.என்.நேரு தலைமையில் வரவேற்றார்கள். மாலை நடைபெறும் நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், தஞ்சை பழனிமாணிக்கம், கரூர் ஜோதிமணி, நாகப்பட்டினம் செல்வராஜ், மயிலாடுதுறை ராமலிங்கம், பெரம்பலூர் ஐஜேகே பாரிவேந்தர், இவர்களோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திருவாரூர் பூண்டிகலைவாணன், அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி, தஞ்சை நீலமேகம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அவர்களை வெற்றிபெற வைத்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டமாக திருச்சி உழவர் சந்தையில் இன்று மாலை மிகப்பிரமாண்டமாக நடைபெறுகிறது. 

சார்ந்த செய்திகள்