Skip to main content

ஆசைக்கு இணங்க மறுத்த திருநங்கையை கத்தியால் குத்திய இளைஞர்கள்! 

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

Transgender had trouble in coimbatore

 

ஆசைக்கு இணங்க மறுத்த திருநங்கையை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞர்களின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம், சூலூர் பள்ளாளையம் பகுதியில் வசித்து வருபவர் திருநங்கை தர்ஷா. இவர், சோனா என்ற இன்னொரு திருநங்கையின் பாதுகாப்பில் இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறார். இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு மேல், பள்ளிப்பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.


கோவை ஒண்டிபுதூர் மிராஜ் தியேட்டர் அருகே வந்துகொண்டிருந்த போது, திருநங்கை தர்ஷாவை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர், தர்ஷாவை பாலியல் ரீதியாக அணுகியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த தர்ஷாவை, மர்மநபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதில், அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்த தர்ஷா, கூச்சலிட்டிருக்கிறார். 


இதனால், அதிர்ந்துபோன மர்ம நபர்கள், திருநங்கையை கத்தியால் குத்தி கொலைசெய்ய முயன்றிருக்கின்றனர். இதில், திருநங்கை தர்ஷாவின் கை மற்றும் கழுத்தில் ஆழமான கத்திகுத்து ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சமயத்தில், அந்த வழியாக ரோந்து வந்த சிங்காநல்லூர் போலீசார், தர்ஷாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். 


அதற்குள், தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த திருநங்கைகள், தர்ஷாவை தொடர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருநங்கையை பாலியல் ரீதியாக அணுகிய இளைஞர்கள், கோவை நீலிக்கோனாம்பாளையத்தில் டாஸ்மாக் கடையில் வேலைபார்க்கும் மேகனாதன் மற்றும் பூபாலன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 


ஆசைக்கு இணங்கமறுத்த திருநங்கையை கத்தியால் குத்திய இளைஞர்களின் செயல், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கோவை ரைசிங்’ - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Coimbatore Rising DMK election report release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, தூத்துக்குடி இடையே பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் - ஈரோடு இடையே அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். ரயில் பராமரிப்பு வசதிகள் கோவையில் உருவாக்கப்படும்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். கோவையில் நகர போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும். கோவையில் புதிய தொழில் ஹப் தொடங்கப்படும். கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும். கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
People should not ignore Transgender says Chief Minister MK Stalin

இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 தேசிய திருநங்கையர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை திருநங்கைகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தேசிய திருநங்கையர் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர் ரியா தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்காகத் தனி நலவாரியம், அடையாள அட்டைகள், பேருந்துகளில் இலவசப் பயணம், மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம், உயர்கல்வி பயிலக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு எனப் புரட்சிகரமான பல திட்டங்களைச் செய்துள்ளது திமுக. தங்களது ஆற்றலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது. நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.