Skip to main content

கலைஞரின் தடம்புரளாத் தம்பி’ ச.அமுதன் இயற்கை எய்தினார்!

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

திராவிட இயக்க சிற்பியாகவும், தான் வாழும் காலம் வரை கொள்கை மாறா பகுத்தறிவாளர் கழகத்தின் காவலனாகவும் திகழ்ந்த, திமுக முன்னாள் தலைமை இலக்கிய அணி செயலாளர் ச.அமுதன் இயற்கை எய்தினார். 

 

அமுதன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார் மு.க.அழகிரி. முக்கிய பிரமுகர்களும், கழகத் தோழர்களும் அமுதனுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அப்போது, அமுதன் வீட்டில் கழகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் அவர் வாழ்ந்த காலம் குறித்து பேச்சு எழுந்தது. 

 

Amuthan passed away

 

கழக நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் பங்கேற்று 32 தடவை சிறை சென்றிருக்கிறார் அமுதன். மிசா கைதியாகவும் இருந்திருக்கிறார். கலைஞரிடமும் பேராசிரியரிடமும் நெருங்கிப் பழகியவர். எந்தச் சூழ்நிலையிலும் கட்சி மாறாமல், திமுககாரராகவே வாழ்ந்தவர். விருதுநகர் மாவட்ட அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாமல்தான் மு.க.அழகிரி ஆதரவு நிலை எடுத்தார். திமுக சீனியராகவும், தொடர்ந்து தனது ஆதரவாளராகவும் இருந்ததால், அமுதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபோது கண் கலங்கினார் மு.க.அழகிரி. 

 

‘வைரத்துக்கு முன் வைக்கப்பட்ட கூழாங்கல்!’ என்னும் தலைப்பில் முரசொலியில் உடன் பிறப்புக்களுக்கு எழுதிய கடிதத்தில் ச.அமுதன் குறித்து இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் கலைஞர் –

 

 

Amuthan passed away

 

‘தங்கள் வாழ்க்கையில் சுழன்றாடுகிற எந்த ஒரு சம்பவத்தையும் பத்திரமாகப் பாதுகாத்து – அச்சம்பவம் எந்த வடிவில் இருந்தாலும் அதனைப் புதையல் போலக் கட்டிக் காத்திடும் பழக்கம் உலகில் ஒரு சிலருக்கே உண்டு. அந்தத் திறன் வாய்ந்தவர்களில் – அத்தகைய அக்கறை உள்ளவர்களில் தம்பி அமுதனும் ஒருவர்’ என்கிறார் நெகிழ்ச்சியுடன். 

 

கலைஞர் எழுதிய அந்தக் கடிதத்தில், ’அமுதன் – தன் குறிப்பு’ என்ற நூலில் வெளியான ச.அமுதனின் சூளுரையும் இடம் பெற்றிருக்கிறது. 

 

Amuthan passed away

 

 

‘தலைவா! உன் நெஞ்சத்தில் இருக்குமளவுக்கு கடந்த நாற்பத்தி ஐந்து ஆண்டுக்காலமாக, என் பால்ய காலம் தொட்டு வெறிபிடித்த கழகத் தோழனாகப் பணிபுரிந்து வந்துள்ளேன். வாழ்நாள் முழுவதும் தடம்புரளாத் தம்பியாகப் பணிபுரிவேன் என்று உறுதி கூறுகிறேன்.’

 

கலைஞரிடம் கூறியபடியே, அவருடைய தடம்புரளாத் தம்பியாக வாழ்ந்து,   தனது பயணத்தை நிறைவு செய்திருக்கிறார் ச.அமுதன்!

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்'- வீடியோ வெளியிட்ட தமிழக முதல்வர்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024

 

The Chief Minister of Tamil Nadu released the video 'We are surrounded by the world of artist

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95 வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்றன.

இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று  (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பாக முத்தரசன், கே. பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்சயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கலைஞர் நினைவிடம் குறித்த வீடீயோவை எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 'கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்! தமிழ்நாடு சுற்றுகிறது! கலைஞர் உலகு ஆள்வார்! உலகம் கலைஞர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும்! என்றென்றும்_கலைஞர்' என பதிவிட்டுள்ளார்.

Next Story

''அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை'' - பேரவையில் முதல்வர் பேச்சு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
"We don't want to celebrate it as a festival" - Chief Minister's speech in the meeting

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று கூட்டத் தொடருக்கான கடைசி நாள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையில் கலைஞர் நினைவிடம் திறப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அவரது உரையில், ''நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவன். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞரின் நினைவகம் முழுமை அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல கலைஞரின் நினைவிடம் மட்டுமல்லாது அவரை உருவாக்கிய நம் தாய் தமிழ்நாட்டின் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணாவின் நினைவகமும், கலைஞரின் நினைவகமும் புதுப்பிக்கப்பட்டு வருகிற பிப்.26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எதற்காக நான் இதை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன் என்று சொன்னால், இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எல்லாம் அடிக்கவில்லை.அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை. ஆகவே இதை நிகழ்ச்சியாகவே நடத்த விரும்புகிறோம். அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லா கட்சிகளுடைய உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் மூலமாக நான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் மூலமாக அழைப்பு விடுத்து இதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.