Skip to main content

இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து; கஞ்சா போதையில் நிகழ்ந்த வெறிச்செயல்

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

 Teenage girl stabbed; A frenzy that occurred under the influence of cannabis

 

சேலம் செவ்வாய்பேட்டை அருகே சாலையில் நின்று கொண்டிருந்த பெண்ணை கஞ்சா போதையில் இருந்த இளைஞர் கத்தியால் குத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட செவ்வாய்பேட்டை லீ பஜார் பகுதியில் மதன்குமார் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மைதிலி. கடந்த திங்கட்கிழமை அன்று மைதிலி கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தார். அப்பொழுது கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்ற இளைஞர் மைதிலியிடம் சீண்டலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் மைதிலி சத்தம் போட்டு திட்டியுள்ளார். இதனால் அந்த நபர் அங்கிருந்து மறைந்துள்ளார்.

 

 Teenage girl stabbed; A frenzy that occurred under the influence of cannabis

 

தொடர்ந்து, திடீரென பின் பக்கமாக வந்த அதே இளைஞர் கையில் வைத்திருந்த கத்தியைக் கொண்டு அவரது இடுப்பில் குத்தியுள்ளார். இதனால் பதறியடித்துக் கொண்டு கடையை நோக்கி ஓடிய மைதிலி, கடையிலிருந்த மாமியாரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். உடனடியாக பெண்ணின் மாமியார் கடையிலிருந்த பொருட்களை வைத்து இளைஞரை தாக்க, தங்கராஜ் தம்பித்து ஓடியுள்ளார். உடனடியாக மைதிலியின் மாமியாரும், அவரது கணவரும் ஒன்று சேர்ந்து கஞ்சா போதையிலிருந்த தங்கராஜை பிடித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து பள்ளப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தங்கராஜை கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்