Skip to main content

ஆற்றில் குளிக்கச் சென்ற வாலிபர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Tragedy happened to the teenagers who went to bathe in the river

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஆரத்தொழவு அவிநாசி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன்(26). ஆன்லைன் நிறுவனத்தின் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இளவரசன் அவரது உறவினர் கார்த்திக் குமார் மற்றும் தேவனாம் பாளையத்தைச் சேர்ந்த நவீன் குமார், சந்தோஷ் குமார், கவிராஜ் மற்றும் சிலர் உடன் காரணாம் பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரைக்கு சென்றுள்ளனர். இளவரசன் மற்றும் நிஷாந்த் இருவரும் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். இருவருக்கும் நீச்சல் தெரியாது. அப்போது திடீரென இளவரசனும், நிஷாந்தும் தண்ணீரில் மூழ்கத் தொடங்கினர்.

‘இருவரும் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்’ என்று அலறினர். இருவரின் சத்தத்தையும் கேட்டு கரையோரம் நின்று கொண்டிருந்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். இதில் நிஷாந்தை நண்பர்கள் காப்பாற்றி விட்டனர். ஆனால் இளவரசன் அதற்குள் நீரில் மூழ்கினார். பின்னர் ஒரு வழியாக அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இளவரசனை அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே இளவரசன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்