Skip to main content

TNPSC குரூப்-1 தேர்வு எழுதுவதில் சிக்கல்! தேர்வர்களின் கோரிக்கைக்குத் தேர்வாணையம் செவிசாய்க்குமா?

Published on 26/12/2020 | Edited on 26/12/2020

 

tnpsc

 

இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி நடப்பதாக இருந்த குரூப்-1 தேர்வு, கரோனா ஊரடங்கு காரணமாக மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது கரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்ததால், அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 3ஆம் தேதி 856 மையங்களில் குரூப் -1 தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தச் சூழலில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, தேர்வர்களின் ஒருமுறைப் பதிவு (one time registration) ஐடியுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே ஹால் டிக்கெட் http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவித்தது.

 

இதனால், தேர்வர்களுக்கு உடனடியாக ஆதார் எண்ணை இணைப்பதிலும் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வதிலும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

 

ஏனெனில், TNPSC ஒருமுறைப் பதிவுடன் (One Time Registration) ஆதார் எண்ணை இணைக்க  முயலும்  போது, பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது.


 
1) இங்கே நிறையத் தேர்வர்களின் ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைக்கப்படவில்லை அல்லது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் தற்போது அவர்களிடம் இல்லை. எனவே, அவர்கள் ஆதார் எண்ணுடன் புதிய மொபைல் எண்ணை இணைக்கச் செல்லும் போது, ஒரு சில தேர்வர்களின் மொபைல் எண் மூன்று நாட்களில் இணைகிறது.

 

ஆனால், ஒரு சிலருக்கு 'பயோமெட்ரிக் அப்டேஷன் ஃபெயில்' என்னும் பிழை (error) காரணமாக தங்களது எண்களை அப்டேட் செய்ய முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளனர். இன்னும், சிலருக்கு இந்தப் பிழை (error) நேரிடாவிடினும், தங்களது எண்ணைப் பதிவு (update) செய்ய 2, 3 நாட்களுக்கு மேல் ஆகுவதாகத் தெரிவிக்கின்றனர்.

 

2) ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தேர்வர்களின் பலரது மொபைல்களுக்கு (OTP) நம்பர் வருவதே இல்லை என்ற குறைபாடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களாலும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய இயலாத நிலை உள்ளது. இதனால் தேர்வுக்கு வருடக்கணக்கில் உழைத்தும், தேர்வை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தை உணர்வதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

 

3) பல தொழில்நுட்பப் பிழையினை சந்திப்பதாகத் தேர்வர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

 

சிலருக்கு, OTR காலாவதி ஆகிவிட்டது. அதனை அவர்கள் புதுப்பிப்பதற்காக கட்டணம் செலுத்தியபோது, Payment Success என்ற நிலையை online Payment செய்யும் போது அடையவில்லை. இதன் காரணமாக, ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய இயலாத நிலை உள்ளது.

 

மேலும், ஓஎம்ஆர் (OMR) விடைத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒரு வருடமாக கரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வு இல்லாத சூழ்நிலையில், ஒரு வருடத்திற்குப் பின் தேர்வு எழுதும் ஆவலில் இருந்தவர்கள், தற்போது தேர்வை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற மனக்கவலையில் உள்ளனர். இதனால், ஏற்பட்ட மன உளைச்சலால் தேர்வு தயாரிப்புப் பணிகளில் கவனத்தோடு ஈடுபட முடியவில்லை.

 

TNPSC தேர்வாணையம், தேர்வர்களுக்குப் பயன்படும் வகையில் சரியான முறையில் தேர்வுகளை எதிர்கொள்ள சில அறிவுரைகளையும், செயல்முறை பதிவு வீடியோக்களையும் வெளியிட்டுள்ளது. இவை, மிகுந்த நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தாலும் கூட, இந்த ஒருமுறை மட்டும் விண்ணப்பித்த அனைவரும் தேர்வெழுத TNPSC தேர்வாணையம் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

 

ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அளவு குறைவாக இருப்பதாலும் தொழில்நுட்பப் பிரச்சனைகள் ஏற்படுவதாலும், இந்தமுறை மட்டும், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே ஹால் டிக்கெட் என்ற நிபந்தனையைத் தளர்த்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் தேர்வு எழுதுபவர்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
1085 nominations accepted in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதாவது திருவள்ளூர் - 31, வட சென்னை - 67, தென் சென்னை - 64, மத்திய சென்னை - 58, ஸ்ரீபெரும்புதூர் - 53, காஞ்சிபுரம் - 31, அரக்கோணம் - 44, வேலூர் - 50, கிருஷ்ணகிரி - 41, தருமபுரி - 44, திருவண்ணாமலை - 49, ஆரணி - 48, விழுப்புரம் - 31, கள்ளக்குறிச்சி - 37, சேலம் - 52, நாமக்கல் - 58, ஈரோடு - 52, திருப்பூர் - 46, நீலகிரி - 33, கோயம்புத்தூர் - 59, பொள்ளாச்சி - 44, திண்டுக்கல் - 35, கரூர் - 73, திருச்சிராப்பள்ளி - 48, பெரம்பலூர் - 56, கடலூர் - 30, சிதம்பரம் - 27, மயிலாடுதுறை - 30, நாகப்பட்டினம் - 26, தஞ்சாவூர் - 36, சிவகங்கை - 39, மதுரை - 41, விருதுநகர் - 41, ராமநாதபுரம் - 56, தூத்துக்குடி - 53, தென்காசி - 37, திருநெல்வேலி - 53, கன்னியாகுமரி - 33 என மொத்தம் 1749 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்து திருவள்ளூர் -14, வட சென்னை - 49, தென் சென்னை - 53, மத்திய சென்னை - 32, ஸ்ரீபெரும்புதூர் - 32, காஞ்சிபுரம் - 13, அரக்கோணம் - 29, வேலூர் - 37, கிருஷ்ணகிரி - 34, தருமபுரி - 25, திருவண்ணாமலை - 37, ஆரணி - 32, விழுப்புரம் - 18, கள்ளக்குறிச்சி - 21, சேலம் - 27, நாமக்கல் - 48, ஈரோடு - 47, திருப்பூர் - 16, நீலகிரி - 16, கோயம்புத்தூர் - 41, பொள்ளாச்சி - 18, திண்டுக்கல் - 18, கரூர் - 56, திருச்சிராப்பள்ளி - 38, பெரம்பலூர் - 23, கடலூர் - 19, சிதம்பரம் - 18, மயிலாடுதுறை - 17, நாகப்பட்டினம் - 9, தஞ்சாவூர் - 13, சிவகங்கை - 21, மதுரை - 21, விருதுநகர் - 27, ராமநாதபுரம் - 27, தூத்துக்குடி - 31, தென்காசி - 26, திருநெல்வேலி - 26, கன்னியாகுமரி - 27 என மொத்தம் 1085 வேட்புமனுக்கள் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 வேட்பாளர்களும், குறைந்தப்பட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் போட்டியில் உள்ளனர். வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். 

Next Story

தமிழகத்தில் 1749 வேட்பு மனுக்கள் தாக்கல்! 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
1749 nominations filed in Tamil Nadu
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. மேலும் தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி (27.03.2024) நாள் ஆகும்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 1403 பேர் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதற்கான தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (28.03.2024) நடைபெற உள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

அதாவது திருவள்ளூர் - 31, வட சென்னை - 67, தென் சென்னை - 64, மத்திய சென்னை - 58, ஸ்ரீபெரும்புதூர் - 53, காஞ்சிபுரம் - 31, அரக்கோணம் - 44, வேலூர் - 50, கிருஷ்ணகிரி - 41, தருமபுரி - 44, திருவண்ணாமலை - 49, ஆரணி - 48, விழுப்புரம் - 31, கள்ளக்குறிச்சி - 37, சேலம் - 52, நாமக்கல் - 58, ஈரோடு - 52, திருப்பூர் - 46, நீலகிரி - 33, கோயம்புத்தூர் - 59, பொள்ளாச்சி - 44, திண்டுக்கல் - 35, கரூர் - 73, திருச்சிராப்பள்ளி - 48, பெரம்பலூர் - 56, கடலூர் - 30, சிதம்பரம் - 27, மயிலாடுதுறை - 30, நாகப்பட்டினம் - 26, தஞ்சாவூர் -  36, சிவகங்கை - 39, மதுரை - 41, விருதுநகர் - 41, ராமநாதபுரம் -  56, தூத்துக்குடி - 53, தென்காசி - 37, திருநெல்வேலி - 53, கன்னியாகுமரி - 33 என மொத்தம் 1749 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.