Skip to main content

"அண்ணாவின் இருமொழிக்கொள்கைக்கு ஆபத்து" -பேரவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published on 15/09/2020 | Edited on 15/09/2020

 

tn assembly dmk mk stalin speech

 

சென்னை கலைவாணர் அரங்கில் இரண்டாவது நாளாக நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி நேரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், "இருமொழி கொள்கை, மாநில சுயாட்சித் தீர்மானங்களைக் கொண்டு வந்து பேரவையில் நிறைவேற்றியவர் பேரறிஞர் அண்ணா. இரு மொழிக்கொள்கை கொண்டு வந்தவுடன் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தவர் அண்ணா. பேரறிஞர் அண்ணா இயற்றிய அனைத்து தீர்மானங்களுக்கும் ஆபத்து வந்துள்ளது. பேரறிஞர் அண்ணாவின் 112- வது பிறந்த நாளில் அவரது தீர்மானங்களைக் காக்க உறுதி ஏற்போம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்