Skip to main content

தமுமுக தலைமையில் முஸ்லிம்களின் உரிமை மீட்பு போராட்டம்!

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

இந்த போராட்டத்தில் பாபா் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீா்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும், பாபா் மசூதி இடிப்பில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமுமுக சார்பாக தமிழ்நாடு முழுக்க டிசம்பர் 6 ஆம் தேதி கருப்புச்சட்டை அணிந்து உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. 

 

 tmmk-protest-all-over-tamil-nadu



இதில் சென்னை மாவட்டத்தின் சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தென் சென்னை மாவட்டத்தலைவர் அபூபக்கர் தலைமை தாங்கினார். இதில்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர்  சிந்தனை செல்வன், திராவிட விடுதலை கழகத்தின் பொதுச் செயலாளர்  விடுதலை ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மௌலவி மன்சூர் காஷிபி,பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ், கிருஸ்துவ நல்லிணக்க இயக்க ஒருங்கிணைப்பாளர் இனிக்கோ இருதயராஜ் கலந்து கொண்டு உரையாற்றினர். 

சார்ந்த செய்திகள்