Skip to main content

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள்

Published on 05/02/2019 | Edited on 05/02/2019
tindivanam


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அரசு போக்குவரத்து பணிமனையில் பணியாற்றும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஒரு நாளைக்கு 550 கி.மீ. பேருந்தை இயக்க வேண்டும் என்பதனை 600 கி.மீ. இயக்க வேண்டும் என்கிற அரசு உத்தரவினை எதிர்த்து சனிக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

திண்டிவனம் அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்டவர்கள் பணிகளை புறக்கணித்து பேருந்துகளை இயக்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டது. 

 

 

 

சார்ந்த செய்திகள்