Skip to main content

“டி.டி.வி. தினகரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை” - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

"There is no prohibition to send enforcement notice to TTV Dinakaran again" - Supreme Court verdict

 

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறையால் 2001 ஆம் ஆண்டு பிறப்பித்த நோட்டீஸ் செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 1995 மற்றும் 1996 ஆண்டு காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து 62 லட்சத்து 71 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அங்கீகாரமற்ற முகவர் மூலமாகப் பெற்று இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக டி.டி.வி. தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் அவர் 28 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது. ஆனால் இந்தத் தொகையைச் செலுத்த முடியாததால், டி.டி.வி தினகரன் திவாலானவர் என அறிவித்து 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நோட்டீஸ் அனுப்பியது.

 

இந்த நோட்டீஸை ரத்து செய்து தனி நீதிபதி கொடுத்த உத்தரவை எதிர்த்து 2005 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 23 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் மற்றும் கலைமதி அமர்வு தீர்ப்பு வழங்கினர். அந்தத் தீர்ப்பில், 'இந்த வழக்கில் அபராதம் என்பது கடன் தான் எனக் குறிப்பிடுவதுடன் அபராத தொகையை செலுத்தாமல் இருப்பதால் அவரை திவாலானவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விசாரணைக்கு உகந்தது தான். ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரை அபராதம் விதிக்கும் உத்தரவை இறுதி செய்து இன்னும் எந்த உத்தரவும் பிறப்பிக்காத முன்பே திவாலானவர் என்று பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் செல்லாதது' என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

மேலும் இந்த நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்வதோடு, மீண்டும் நோட்டீஸ் அனுப்ப அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், மீண்டும் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி அதனுடைய நடவடிக்கைகளைத் தொடங்க எந்தவிதமான தடையும் இல்லை எனத் தீர்ப்பில் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.