Skip to main content

விடுதலைப் புலிகள் பாதுகாப்பில் இருக்கும் வரை கடலில் போதைப் பொருள் கடத்தல் இல்லை!

Published on 13/08/2018 | Edited on 13/08/2018
ll

  

 தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தங்கம், கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பிடித்து வருகிறார்கள். விமான நிலையத்திற்கு கடத்தி வரப்படும் தங்கத்திற்கும் விமான நிலைய அதிகாரிகள் சிலருக்கும் நல்லுறவு உண்டு என்பதை கண்டறிந்து சி.பி.ஐ. பிடித்துள்ள நிலையில் தற்போது கடல் வழியாக கஞ்சா கடத்தல் தொடங்கியுள்ளது.

 

l


    

கடந்த 10ம் தேதி  காலை புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் கடற்கரைக்கு இலங்கையில் இருந்து ஒரு படகில் கஞ்சா மூட்டைகள் வருவதை திருப்புண்னவாசல் கடலோர காவல் துறையினருக்கு தகவல் கிடைக்க தயாராக காத்திருந்த காவல் துறையினர் 200 கிலோ கஞ்சா மூட்டைகளை ஒரு படகில் இருந்து மீட்டனர். ஆனால் அந்த படகில் வந்த நபர் தப்பிவிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளை மணமேல்குடி கடலோர காவல் துறையிடம் திருப்புனவாசல் போலிசார் ஒப்படைத்துள்ளனர். மேலும் சிலரிடம் விசாரனை நடந்து வருகிறது.

 

l


    இது குறித்து ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவர்கள் கூறும் போது.. கடத்தல் பொருட்களின் பிறப்பிடமாக இலங்கை உள்ளது. சர்வதேச அளவில் இலங்கை வரும் விமானங்களில் தங்கம், கஞ்சா, கெராயின் போன்ற பொருட்கள் இறக்கப்பட்டு அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு விமானம் மூலமும், படகுகள் மூலமும் கொண்டு வரப்படுகிறது. சமீபகாலமாக விமான நிலையத்தில் கெடுபிடி அதிகமானதால் மீண்டும் கடல் மார்க்கத்தை கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை, ராமநாதபுரம் கடல் பகுதிக்கு நவீன படகுகள் மூலம் கடத்தில் வரப்பட்டு மோட்டார் சைக்கிள், கார்கள் மூலம் வெளியே எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 120 கிலோ தங்கம் 3 மாதத்தில் பிடிபட்டது. ஆனால் அந்த தங்கத்திற்கான உரிமையாளர் யார் என்பது இதுவரை கைது செய்யப்படவில்லை. அதன் பிறகு கடலோர கடத்தல்கள் சற்று குறைந்தது.


    இப்போது மீண்டும் கடலோர கடத்தல் தொடங்கி இருக்கிறது. இதனால் இனி நம்ம மீனவர்களுக்கு தொல்லைகள் தொடங்கிவிடும். ஆனால் இலங்கை கடற்பகுதி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை எந்த கடத்தல்காரனும் உள்ளே நுழையமுடியவில்லை. அதே போல அந்நிய சக்திகளும் வரமுடியவில்லை. ஆனால் இப்ப கடத்தல்காரனும் வருகிறான், இலங்கை நேவி இந்திய மீனவர்களை அடிக்கிறான், சீனாக்காரன் உள்ளே வந்து போறான் இப்படி நம்ம நாட்டுக்கான பாதுகாப்பே குறைந்து வருகிறது. நடுக்கடலில் பாதுகாப்பில் இருந்த இந்திய கடற்படை கண்ணில் மண்ணை தூவிட்டு தான் கடத்தல் கஞ்சா வந்திருக்கு என்றனர்.
            
 

சார்ந்த செய்திகள்

Next Story

நாகை மீனவர்கள் மீது தாக்குதல்... இலங்கை மீனவர்கள் 10 பேர் மீது வழக்கு!

Published on 26/09/2021 | Edited on 26/09/2021

 

10 Sri Lankan fishermen sued!

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆற்காட்டுத்துறை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இலங்கை மீனவர்கள் அரிவாள், கட்டைகளால் தாக்கியதில் தமிழ்நாடு மீனவர்கள் சின்னதம்பி, அவரது மகன்கள் சிவா, சிவகுமார் ஆகியோர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 3 மீனவர்களும் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீனவர்களுக்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் ஆறுதல் கூறி, உரியச் சிகிச்சை தர மருத்துவர்களை அறிவுறுத்தினார். தொடரும் இலங்கை மீனவர்கள் தாக்குதலைக் கண்டித்து ஆற்காட்டுத்துறை மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை மீனவர்களின் தாக்குதலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த வேலைநிறுத்தம் நேற்று நடைபெற்றது. இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த சம்பவத்தில் மீனவர்களைத் தாக்கி 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ வலை உள்ளிட்ட பொருட்களை இலங்கை மீனவர்கள் திருடிச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மீனவர்களைத் தாக்கி கொள்ளையடித்த இலங்கையைச் சேர்ந்த 10 மீனவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

 

 

 

Next Story

'என் நண்பர் ராஜபக்சேவுடன் உரையாற்றியதில் பெருமகிழ்ச்சி' - தமிழில் பிரதமர் மோடி ட்விட்!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

Delighted to address my friend Rajapaksa - Modi tweet in Tamil!

 

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவுடன் இந்தியப் பிரதமர் மோடி இன்று காணொளிக்காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார் .

இந்தியா - இலங்கை இடையேயான உச்சி மாநாடு இன்று காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக, இருநாட்டு பிரதமர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இதுதான் முதல் முறையாகும். 

இந்நிலையில், 'என் நண்பர் ராஜபக்சேவுடன் உரையாற்றியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அபிவிருத்தி, பொருளாதார உறவு, கல்வி, கலாச்சாரம் குறித்த விஷயங்கள் குறித்து பேசினோம். பல்லாயிரம் ஆண்டுகளாக புத்தபெருமான் போதனைகள் எமது மக்களுக்கு வழிகாட்டுகின்றன. பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக எமது உறவு மேலும் வலுப்படும்'' என தமிழில் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.