Skip to main content

இறந்தவர் கையில் இருந்த 20 பவுன் நகைகள் திருட்டு

Published on 09/07/2018 | Edited on 09/07/2018

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் புலிகேசி. இவரது மனைவி வசந்தா. 47 வயதான வசந்தா கடந்த 6ந் தேதி இறந்தார். இவரது உடல் வீட்டுக்கு வெளியே உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. வசந்தாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய உறவினர்கள், நண்பர்கள் குடும்ப பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். அன்று மாலை உடல் அடக்கம் செய்ய இறுதிகாரியங்கள் நடைபெற்றது.

 

 


அப்போது அவரது கழுத்தில் இருந்த 20 பவுன் தங்கத்திலான தாலி சரடு காணாமல் திடுக்கிட்டனர். வசந்தா இறந்தபோதும், அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டுக்கு வெளியே வைத்தபோது இருந்த சரடு இறுதிகாரியங்கள் செய்ய முயலும்போது காணாமல் போய்வுள்ளது என்றால் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் தான் யாரோ திருடியிருக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

துக்கம் நடந்த வீட்டில் யார் மீது சந்தேகப்படுவது என யோசித்த குடும்பத்தார் மஞ்சள் தாலி சரடை கழுத்தில் மாட்டி இடுக்காட்டுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். அடக்கம் செய்தபின் குடும்ப உறவு பெண்களிடம் விசாரித்தபோது, உடல் அருகே அமர்ந்து சில பெண்கள் குழுமி உட்கார்ந்து அழுதார்கள். அவர்கள் நமக்கு உறவினர்கள் கிடையாது, யார் என்றும் தெரியாது, இந்த பகுதியில் பார்த்ததும் கிடையாது எனச்சொல்ல அதிர்ச்சியாகினர். இதுப்பற்றி வசந்தாவின் மகன் பிரபு, திருப்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார்.

 

 


தமிழ்சினிமாவில் வினுசக்கரவர்த்தி ஒருப் படத்தில் இறந்ததுப்போல் நடிப்பார். அப்போது துக்கத்துக்கு வருபவர்கள், அவர் அணிந்திருந்த மோதிரங்கள், கழுத்து செயின் என திருடிச்செல்வார்கள். மற்றொருப்படத்தில் இறந்தவர் நெற்றியில் உள்ள பணத்தினை பார்த்திபன் அபேஸ் செய்வார். அதுயெல்லாம் காமெடிக்காக திரைப்படத்தில் வைக்கப்பட்டது. ஆனால் நிஜமாகவே இறந்துப்போன பெண்ணின் இறுதிகாரியத்துக்கு வந்து பிணத்திடம் திருடி சென்றது பொதுமக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.


சாலைகளில் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்கள், காயம்பட்டு மயக்கமடைந்தவர்களிடம் திருடியவர்கள், தற்போது துக்கவீட்டுக்கு வந்து இறந்தவர்கள் உடல் மீதுள்ள நகையையே திருடியுள்ளார்கள். இந்த புகாரை வாங்கிய போலீசார், இந்த புதுவித திருடர்கள் யார் என தெரியாமல் 3 நாட்களாக மண்டையை போட்டு பிய்த்துக்கொண்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.