பெண்ணிடம் செயின் பறிப்பு
பாடி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சுகன்யா (37) நேற்று மாலை சுகன்யா முகப்பேரில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்று, அங்கு பயிலும் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர், திடீரென சுகன்யாவை வழிமறித்து, அவரது கழுத்தில் கிடந்த 6 சவரன் செயினை பறித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அதற்குள் மர்ம நபர்கள், செயினுடன் தப்பி சென்றனர். புகாரின் அடிப்படையில் கொரட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.