Skip to main content

ஆசிரியையின் கணவர் திடீர் மரணம் - கொலையா? தற்கொலையா? மாறுபட்ட தகவல்களால் போலீசார் குழப்பம்!

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

teacher husband incident police investigation in salem district police investigation

 

 

கெங்கவல்லி அருகே தனியார் பள்ளி ஆசிரியையின் கணவர் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்தார். அவரை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்றும், அவரே கை, கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் மாறுபட்ட தகவல்கள் கிடைத்ததால் காவல்துறையினர் குழப்பம் அடைந்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம், கெங்கவல்லி தெற்கு வீதியைச் சேர்ந்தவர் மோகன். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான இவருடைய மகன் முருகன் என்கிற சதீஷ் (வயது 42). இவருடைய மனைவி வனிதா (வயது 30). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். 

 

வனிதா, தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில்தான் அவர்களின் மகனும் படிக்கின்றான். திருமணம் ஆன நாளில் இருந்தே முருகன் எங்கேயும் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் வனிதாதான் குடும்பச் செலவுகளை கவனித்து வந்துள்ளார். 

 

முருகனுக்கு கஞ்சா மற்றும் மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் ஊரில் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். நாளடைவில் கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். 

 

இதனால் அவர் தற்போது குடியிருந்து வரும் வீட்டை விற்று, அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கடனை அடைத்து விடலாம் என முடிவு செய்துள்ளார். இதற்காக அவர், அமுதா என்பவரிடம் வீட்டை விற்க முடிவு செய்துள்ளார். 

 

இதற்காக அமுதா, அவருக்கு வங்கி கணக்கு மூலம் 7 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். முருகன், வங்கியில் 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்ததால், அதற்கான தொகையையும் கொடுத்திருந்தார். இந்தப் பணத்தைக் கொண்டு அவர் யார் யாரிடம் கடன் வாங்கியிருந்தாரோ அவர்களுக்கு திருப்பிக் கொடுத்து வந்தார். 

 

இந்நிலையில், செவ்வாய் கிழமை (ஆக. 16), வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றிருந்த வனிதாவும், அவருடைய மகனும் மாலையில் வீடு திரும்பினர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கு, முருகன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். 

 

கை, கால்களில் கத்தியால் வெட்டப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. சடலத்தைப் பார்த்து வனிதாவும், மகனும் கதறி அழுதனர். இதுகுறித்து கெங்கவல்லி காவல்நிலையத்தில் வனிதா புகார் அளித்தார். 

 

காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

வீடு விற்பது தொடர்பாக அமுதா என்பவர் வங்கி கணக்கு மூலம் செலுத்தியிருந்த பணத்தை, கடன்காரர்களுக்கு கொடுப்பதற்காக முருகன் பணத்தை எடுத்து வந்துள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை வீடு வரை பின்தொடர்ந்து வந்து, கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.