Skip to main content

‘தமிழ்மொழியில் பேசவும், எழுதவும் முடியாத தமிழர்கள் வந்துள்ளீர்கள்..’ – தமிழியக்கம் விழாவில் துணை முதல்வர் பேச்சு

Published on 16/10/2018 | Edited on 16/10/2018
ops

 

உலகம் முழுவதும் உள்ள தமிழர் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதற்கான தமிழியக்கம் என்கிற ஒருங்கிணைந்த அமைப்பின் தொடக்க விழா சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அக்டோபர் 15ந்தேதி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தீந்தமிழ் திறவுகோல் என்ற நூலினை தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னிர் செல்வம் வெளியிட்டார். மாநில தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தமிழியக்கம் வலைத்தளத்தை தொடங்கி வைத்தார். 

 

நிகழ்ச்சியில் தமிழியக்க நிறுவன தலைவரும் விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசியபோது, 1916 ம் ஆண்டில் மறைமலையடிகள் தலைமையில் தமிழ்மொழி இயக்கம் தொடங்கப்பட்டது. 101ஆண்டுகள் கழித்து சாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு  தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும்  உள்ள தமிழர்களையும், தமிழ் அமைப்புகளையும் ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வரும் வகையில் இந்த தமிழியக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 2007 ம் ஆண்டில் ஐரோப்பா யூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டர் அப்துல் கலாம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கவிஞர் கலியன் பூங்குன்றனார் பாடலை குறிப்பிட்டு  உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று என்றும் உலகமயமாக்கல் பற்றி மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடியுள்ளார். நமது தாய்மொழியான  தமிழ்மொழியின் முக்கியத்துவத்தை தமிழ்மக்கள் அறியாமல் உள்ளனர். உலகில் மூத்த மொழிகளாக 7 மொழிகள் உள்ளன. அதில் ஐரோப்பாவில் கிரேக்கமும் லத்தினும், மேற்கு ஆசியாவில் பாரசீகம் இபுரூ, இந்தியாவில் தமிழ் மற்றும் சமஸ்கிரதம், சீனாவின் சீன மொழிகளாகும். இவற்றில் பலமொழிகள் எழுத்து வடிவிலும் பேச்சு வடிவிலும் இல்லை. மாறாமல் இன்றும் வழக்கத்தில் இருப்பது தமிழ்மொழியும், சீன மொழி  மட்டுமே, இவற்றில் மூத்தமொழி தமிழ்மொழியாகும். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழியில் இலக்கணம், இலக்கியம் உருவாகியது, தொல்காப்பியம் என்ற தமிழ்நூல் இலக்கண வடிவில் எழுதப்பட்டது.

 

அப்படிப்பட்ட தமிழ் மொழியினை தமிழர்கள் மறந்து விடுவார்களோ என்ற நிலை உருவாகியுள்ளது. படித்தவர்களே ஆங்கிலம் கலக்காமல் தமிழ்மொழியில் பேசாத  நிலை உள்ளது. முன்பெல்லாம் ஒருவர் பேசும் மொழியை வைத்தே அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை அறிய முடியும், ஆனால் தமிழரை அப்படி கண்டுபிடிக்க முடியவில்லை. வேறுமொழிக்கு நாம் விரோதிகள் அல்ல. மக்களிடையே, மாணவர்களிடையே, ஒவ்வொரு குடும்பத்தினரிடையே இந்த இயக்கம் சென்று சேரவேண்டும்   நமது தமிழ்மொழியை பாதுகாக்கவும் தமிழை பரப்பவும் தொடங்கப்பட்டது தான் இந்த தமிழியக்கம். இந்த பணியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களும் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

 

op

 

அவரை தொடர்ந்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் பேசும்போது, சிறந்த கல்வியாளர்கள் மக்களுக்கு தொண்டாற்றுபவர்களை தமிழியக்கம் மூலமாக சந்திப்பதில் மகிழ்ச்சியாகவுள்ளது. இயக்கத்தின் தலைவரும் விஐடி வேந்தருமான விசுவநாதன் பேரறிஞர் அண்ணா,  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் அன்பை பெற்று எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் பொறுப்புக்கள் மூலமாக மக்கள் பணியாற்றியவர். இவ்வுலகில் உள்ள தமிழ் மக்களை ஒருக்குடையின் கீழ்  இணைக்க கட்சி பாகுபாடின்றி உருவாக்கப்பட்டுள்ள இந்த தொண்டானது தமிழ் ஆர்வத்திற்கு பெரிதும் உதவும். தமிழ் மொழி ஒழுக்க நெறிகள்  பண்பாட்டு நிலைகளை எடுத்து காட்டும் மொழியாகும். உலகில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளது. இதில் இந்தியாவில் சுமார் 1580 மொழிகள் உள்ளன. இவற்றில் தொண்மையான மொழியாக திராவிட மொழி விளங்குகிறது. திராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது, திராவிட குடும்பத்தின் முதல்மொழி தமிழ்மொழியாகும். பழமையான தமிழ் மொழி இன்னும் மாறாமல் விளங்குகிறது. ஒரு தலைமை மொழிக்கு உரிய தாய்மை வடிவம் பண்பாடு கலையறிவு மெற்ற மொழிதான் தமிழ்மொழி. அத்தகைய தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி பெருமை சேர்த்தனர். 

 

தமிழர்களாக இருந்தும் தமிழ் மொழியில் பேச முடியாமல் எழுதமுடியாமல் உள்ள உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தமிழர்கள் வந்துள்ளனர். அவர்கள் தமிழ் மொழி பேசவும்  எழுதவும்  தமிழியக்கம்  உறுதுனையாக  இருக்கும் என்று கருதுகிறேன். விசுவநாதன் எடுத்துள்ள இந்த முயற்சி உலகில் யாரும் எடுக்க முடியாத முதல் முயற்சியாக இருக்கும் என்று கருதுகிறேன். இந்த அமைப்பு எப்படிபட்ட சுனாமி புயல் வந்தாலும் அசைக்க முடியாத அமைப்பாக உருவாகியுள்ளது. நிகழ்ச்சியின் மூலமாக விடுவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை தமிழக அரசு சட்டமாக இயற்றி அதனை நிறைவேற்றும். தமிழியக்கம் என்ற விதை விதைக்கப்பட்டுள்ளது இது செடியாகி மரமாகி ஆலவிருட்சமாக விளங்கி மக்களுக்கு பயனாற்றும் என்று கூறினார்.

 

இந்நிகழ்ச்சியில்  மொரிசீயஸ் நாட்டின் ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி, கயானா நாட்டின் தலைமை அமைச்சர் மோசசு வீராசாமி நாகமுத்து, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுக பொது செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், மதிமுக பொது செயலாளர் வை.கோ,  தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் போன்றோர் கலந்துக்கொண்டு பேசினர்.

 

நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழியக்க தீர்மானங்கள்.

1, தமிகத்தில் தொடக்கப் பள்ளி முதல் முதல் பல்கலைக்கழகம் வரை தமிழை ஒரு பாடமாக மாணவர்கள் படித்தே ஆக வேண்டும் என்னும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்என்று தமிழியக்கம் வேண்டுகிறது.

2, உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதியரசர்கள் பொறுப்பேற்கும்போது தேவநாகரிக எழுத்துருவில் ஒப்பமிட வேண்டும் என்னும் நடைமுறைக்கு மாற்றாக அவரவர் தாய்மொழிலேயே கையொப்பமிடலாம் என்னும் விதியை மைய அரசு நடைமுறைப் படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தையும் மைய அரசையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

3. உரிய வேலை வாய்ப்பின்மை காரணமாக தமிழ் இலக்கியம் பட்டம் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவதால் தமிழ் இலக்கிய பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க ஆவன செய்யுமாறு தமிழக அரசை கோப்படுகிறது.

4, தமிழகத்திலிருந்து புறப்படும் மற்றும் தமிழகத்திற்கு வரும் வானூர்திகளிலும் தமிழகத்திலுள்ள வானூர்தி நிலையங்களிலும் தமிழிலும் அறிவிப்பு செய்திட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.