Skip to main content

நக்கீரன் ஆசிரியரை விசாரணைக்கு அழைத்த காவல்துறைக்கு தமிழ்நாடு- புதுச்சேரி பிரஸ்& மீடியா செய்தியாளர்கள் சங்கம் கண்டனம்!

Published on 14/03/2019 | Edited on 14/03/2019

துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன்கோபாலை விசாரணைக்கு அழைத்த காவல்துறைக்கு தமிழ்நாடு- புதுச்சேரி பிரஸ்& மீடியா செய்தியாளர்கள் சங்கம் கண்டனம்தெரிவித்துள்ளது.

 

NN

 

அந்த அறிக்கையில், 

 

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை நக்கீரன் இதழில் செய்தியாக வெளியிட்டது தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் நக்கீரன்கோபாலை நாளை (15-03-2019) காலை 11 மணிக்கு சென்னை பழைய கமிஷனர் அலுவலத்தில் ஆஜராகுமாறு மத்தியக்குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.  

 

புகார் கொடுத்த பெண்களின் பெயர் விபரங்களை இரகசியம் காக்கவேண்டிய  மாவட்டக்காவல்துறையே அவர்களின் விபரங்களை ஊடகச்செய்தியாக வெளியிட்டு, பாலியல் கொடூரன்களால் பாதிக்கப்பட்டு புகார்கொடுக்கவரும் பெண்களை அச்சுறுத்தியது மட்டுமல்லாமல் விசாரணையையும் சரியாக செய்யவில்லை என்பதால்தான் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி புள்ளிகளின் தொடர்பு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டதால் தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு  மாற்றியது.

 

நக்கீரன் இதழ் வெளியிட்ட வீடியோ செய்திகள் தமிழகத்தில்  மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி குற்றவாளிக்கு எதிரான கண்டனங்களை பெருகச்செய்தது.  நக்கீரன் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் வெளியான செய்திகள் குறித்து உண்மையா? பொய்யா? என்பதை விசாரிக்கவேண்டியது இனி சி.பி.ஐ.தான்,

 

ஒரு வழக்கில் குறுக்கீடு செய்தாலோ விசாரணைக்கு தடங்கல் ஏற்படுத்தினாலோ அது குற்றவாளிகளுக்கு உதவுவதாகத்தான் அர்த்தம். அதிமுக பிரமுகர் மகன்கள் உள்ளிட்டவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை சி.பி.ஐ. விசாரிக்கப்போகும் சூழலில் அதுகுறித்து, செய்தி வெளியிட்டவர்களை அழைத்து விசாரணை செய்து ஆவணங்களை கைப்பற்றி, தடயங்களை அழிக்கும் முயற்சியிலும் இனி, அவர் குறித்த செய்திகள் ஊடகங்களில் வராமல் தடுப்பதற்கான முயற்சியிலும் சைபர்கிரைம் காவல்துறை செயல்படுவதுபோல் உள்ளது.  மேலும், சி.பி.ஐ. விசாரணையில் குறுக்கீடு செய்வது குற்றவாளிகளுக்குத்தான் சாதகமாக அமையும்.

 

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தப்பார்க்கிறார் என்று தோன்றுகிறது. நக்கீரனில் வெளியான செய்தி அவதூறாக இருந்தால் பொள்ளாச்சி ஜெயராமன் சட்டப்படி நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும்.

 

அப்படியே,  நக்கீரன் கோபால் மீதுபொள்ளாச்சி ஜெயராமன்

புகார் கொடுத்தாலும் அந்தப்புகாரை சி.பி.ஐ.க்குதான் அனுப்பவேண்டுமே தவிர, சைபர் கிரைம் விசாரிப்பதில் நியாயமில்லை. அதனால், பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராகவும் தமிழகத்தை உலுக்கிய பாலியல் கொடூரத்தை வெளிக்கொண்டுவருவதை தடுக்க முயற்சிக்கும் செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம். இது ஜனநாயகத்தின் நான்காவது தூணை நசுக்க என்றே தோன்றுகிறது, தற்போதுதான் நீதியரசர்கள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோரைக்கொண்ட அமர்வு,  'தமிழ் நாட்டில் பத்திரிக்கையாளர் களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை' என்று தெரிவித்து இருந்தது. அதை, மெய்ப்பிக்கும் வகையில் தற்போது சூழல் அமைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.