Skip to main content

பிடிகாசு வாங்க 7 பேர் நசுங்கி உயிரிழந்த கோவிலுக்கு சீல் வைத்த கலெக்டர்!

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்பசாமிகோவிலில் கடந்த மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்ற திருவிழா பவுர்ணமியை முன்னிட்டு பிடிகாசு வழங்கும் விழா நடைபெற்றது.

A collector sealed to a temple that was crushed incident

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சியை சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றதால் கூட்ட நெரிசலில் 4 பெண்கள் 3 ஆண்கள் உள்ளிட்ட 7 பேர் சிக்கி நசுங்கி பேர் உயிரிழந்தனர் - 11 பேர் காயமடைந்தனர்.
 

A collector sealed to a temple that was crushed incident

இது தனியாருக்கு சொந்தமான கோவில் என்பதால் இச்சம்பவத்தை தொடர்ந்து இக்கோவிலின் உரிமையாளர் பூசாரி தனபால் கைது செய்யப்பட்டார் -  சிக்கி இறந்து போனவர்களுக்கு பிரதமர் நிவாராண தொகை வழங்கினார்.

இந்த நிலையில் அரசு அனுமதியின்றியும், அறநிலையத்துறையினரிடம் அனுமதி பெறாமலும் கட்டப்பட்டு உள்ளதால் மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில் கோயில் மூடபட்டு சீல்வைக்கப்பட்டது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்