Skip to main content

பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

TAMILNADU CHIEF MINISTER MKSTALIN WROTES A LETTER FOR PM

 

கரோனா தடுப்பூசிகள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20/09/2021) எழுதிய கடிதத்தில், "தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசிகள் அதிகளவில் போடப்பட்டுவரும் நிலையில், அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்பாக தகுதியுள்ள அனைவருக்கும் இத்தடுப்பூசிகளைப் போடுவதற்காக வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும். வாரத்தில் ஆறு நாட்களுக்குத் தினமும் 5 லட்சமும், ஏழாவது நாளில் 20 லட்சம் தடுப்பூசிகளைப் போடவும் திட்டமிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்