Skip to main content

தமிழகப்பகுதி குப்பை கொட்டும் பகுதியா? சர்ச்சையாகும் கேரள கழிவுகள்!!

Published on 28/11/2018 | Edited on 28/11/2018

நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை அருகேயுள்ள புளியரை நகரம், கேரள மாநிலத்தின் நுழைவு வாயில், அன்றாடம் கேரளாவுக்கு தேவையான அரிசி காய்கறி தொட்டு அணியும் ஆடை வரையிலான அனைத்து பொருட்களைக் ஏற்றிக்கொண்டு வாகனங்கள் சென்று வருகின்றன. இவைகள் இருமாநில எல்லையில் அமைந்திருக்கிற சோதனைச் சாவடிகளைக் கடந்தே வருகின்றன.

 

Tamil Nadu is part of a garbage dump

 

சில வேளைகளில் தடை செய்யப்பட்ட பொருட்களும், கவனிப்பு அடிப்படையில் நுழைந்து விடுவதுண்டு. மேலும் சந்தடி சாக்கில், கேரளாவின் அண்டை மாவட்டமான கொல்லம், கோட்டயம் கண்ணூர் பத்தனம்திட்டா போன்ற மாவட்டங்களில் உணவுக்காக பயன்படுத்தப்படும் கறிக்கோழிகளின் கடசல்கள் மற்றும் அங்குள்ள மருத்துவக்கழிவுகள் ஆபரேஷன் மூலம் அகற்றப்படும் சதைப் பிண்டங்கள் போன்ற கழிவுகள் ஆபத்தை விளைவிக்கும் நோய்க் கிருமிகளைக் கொண்டவை. இதுபோன்ற கழிவுகள் கொண்டுவருகிற வாகனங்கள் இரவு நேரத்தில், தமிழக எல்லைப் பகுதியான புளியரை செங்கோட்டை தேன் பொத்தை, தென்காசி பகுதிகளில் கொட்டிவிட்டுப் போவது சுகாதாரக் கேடுகளை விளைவிப்பதால் அது பிரச்சனையானதால் மாவட்ட நிர்வாகம் அதுபோன்ற வாகனங்களை தடை செய்தும், மீறி நுழைந்தால் அவைகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இவைகளைத் தொழிலாய் கொண்ட வாகனங்களில் இன்றளவும் தமிழக எல்லைப்புறத்தில் கழிவுகள் கொட்டுவதை வாடிக்கையா வைத்துள்ளன. 

 

 Controversy is the Kerala waste

 

இதனிடையே கடந்த 21-ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பிளாஸ்டிக் மற்றும் மருந்து கழிவுகளை ஏற்றி வந்த 15 கேரளா லாரிகள் சோதனைச் சாவடிகளில் பிடிபட்டுள்ளன. இவைகளில் சில மருத்துவக் கழிவுகளை கொண்டது கண்டறியப்பட்டு அவர்களுக்கு தலா மூன்று லட்சம் அபராதமும், மற்றவைகளுக்கு தலா 30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

 Controversy is the Kerala waste

 

இதில் 13 லாரிகளின் உரிமையாளர்கள் அபராத தொகையை கட்டியுள்ளனர். அவைகள் தென்காசி கோட்டாட்சியர் சவுந்திரராஜன், வட்டாட்சியர் வெங்கடாச்சலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரகுபதி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு அவைகளை திரும்பவும் கேரளாவுக்கே அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்கின்றார்கள் வருவாய் வட்டார துறையினர்.

 

ஆனால் தொடர்புடைய கேரள வாசிகளோ, அவைகள் இரும்புக் கழிவுகள் என்கின்றார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர்.