Skip to main content

நடு விரலில் மை:தொடங்கியது நான்கு தொகுதிகளில் வாக்குப்பதிவு!

Published on 19/05/2019 | Edited on 19/05/2019

தமிழகத்தில் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட  நிலையில் தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

vote

 

அதேபோல் மக்களவைத் தேர்தலில் சில வாக்குச்சாவடிகளில் முறையாக வாக்குப்பதிவு நடைபெற வில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு அறிவித்திருந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 13 வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

தர்மபுரி-8  தேனி -2, திருவள்ளூர், ஈரோடு, கடலூரில் தலா ஒன்று  என மொத்தம்  13 வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 

தேனியில் 197 ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரம் பழுது சரி செய்யப்பட்டு வடுகப்பட்டி 197 வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு தொடங்கியது.

 

தற்போது  நடைபெற்று வரும் நான்கு தொகுதி இடைத் தேர்தல்களிலும் வாக்காளர்களுக்கு நடு விரலில் மை வைக்கப்பட்டு வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்