Skip to main content

நெடுவாசலில் போராட்டம் நடத்திய 7 விவசாயிகளுக்கு சம்மன்!  

Published on 05/05/2018 | Edited on 06/05/2018

 

nuduvasal


    

கீரமங்கலத்தில் கடந்த ஆண்டு நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடிய விவசாயிசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தியதாக கீரமங்கலம் பகுதி விவசாயிகள் 7 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் கடந்த ஆண்டு மார்ச் 6 ந் தேதி.  நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதிக்க வேண்டும் காவிரி பாசனப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். டெல்டா மற்றும் தமிழகத்தில் எரிவாயு எடுக்க தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட என்ற கோரிக்கையை வலியுறுத்தி அறப்போராட்டம் நடத்த பந்தல் அமைத்துக் கொண்டிருந்து இறுக்கைகள் அமைத்துக் கொண்டிருந்தனர். 

 

அப்போது அங்கு வந்த அப்போதைய கீரமங்கலம் போலிஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், மற்றும் ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அப்துல் முத்தலிபு ஆகியோர் அனுமதி இன்றி போராட்டம் நடத்தக் கூடாது என்று பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக சொன்னார்கள். ஆனால் போராட்டத்தில் இருந்தவர்கள் கலைய மறுத்தனர். அப்போது போலிசார் கைது செய்ய முன்வந்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் கைது செய்ய மறுப்பு தெரிவித்து கைது செய்தால் சாலை மறியல், உண்ணாவிரத போராட்டம் தொடர்வதாக கூறினார்கள். அதன் பிறகு நீண்ட நேரத்திற்கு பிறகு போராட்ட பந்தல் பிரிக்கப்பட்டாலும் இயக்கநர் களஞ்சியம் அங்கு வந்து பேசினார். அதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அப்போது கீரமங்கலம் போலிசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை திரும்ப பெறவேண்டும் என்று அடுத்த சில நாளில் போராட்டம் நடத்த முயன்றனர். 

 

இந்த நிலையில் ஒரு ஆண்டு கடந்துவிட்ட நிலையில் நேற்று முன்தினம் கீரமங்கலம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர்கட்சி மாவட்டத் தலைவர் துரைப்பாண்டியன், சுந்தரபாண்டியன், பாண்டியன், குமார்,  தங்க.கண்ணன், செங்கு (எ) சின்னசாமி, சோமதுரை உள்ளிட்ட 7 விவசாயிகளுக்கு ஆலங்குடி நீதிமன்றத்தில் எதிர்வரும் 15 ந் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் வந்துள்ளது. 

 

இந்த வழக்கு சம்மந்தமாக நெடுவாசல், வடகாடு போராட்டக் குழுவினர் கூறும் போது.. ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கோட்டைக்காடு ஆகிய பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடந்தது. அதே போல தமிழகம் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் தமிழர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் எந்த ஊரிலும் விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. ஆனால் கீரமங்கலத்தில் போராடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது நெடுவாசல் திட்டத்திற்காக போராட்டம் நடத்தும் விவசாயிகள், அரசியல் கட்சிகள், அமைப்புகளை அச்சுறுத்தும் செயலாக உள்ளது. அதனால் இந்த வழக்கை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்றனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“விவசாயிகளின் கோரிக்கை எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை” - ஜார்க்கண்ட் ஆளுநர் 

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
 Jharkhand Governor c.p.radhakrishnan says I don't know how feasible the farmers' demand is

தலைநகர் டெல்லியை நோக்கி,  12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி,  பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.

காவல்துறையினரால் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு வெடித்து,  பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன் சிங் (வயது 24) என்னும் இளம் விவசாயி கடந்த 21ஆம் தேதி உயிரிழந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.இராதாகிருஷ்ணன் இன்று (23-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பஞ்சாப்பில் இருந்து விவசாயிகளின் போராட்டம் அடிக்கடி நடக்கிறது. ஏன் என்று எங்களுக்குப் புரியவில்லை. குறைந்தபட்ச விலையை எப்படி சட்டப்படி உறுதி செய்வது என்று தெரியவில்லை. அவர்களின் கோரிக்கை எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. நீங்கள் அதிக எண்ணிக்கையில் வந்து போக்குவரத்தைத் தடுக்குறீர்கள். பிறகு, அரசு சில நடவடிக்கை எடுக்கத் தான் வேண்டும்” என்று கூறினார். 

Next Story

“விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது தான் உங்களின் ஜனநாயகமா?”  - ராகுல் காந்தி காட்டம்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Rahul Gandhi  questioned suppressing every voice of truth is your democracy

தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கெனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.

இதனிடையே, போராட்டத்தில் உள்ள விவசாயிகள் மீது போலீசார் நடத்தும் கண்ணீர்புகை குண்டு வீசும் வீடியோக்களை விவசாயிகள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அரசின் உத்தரவின் பேரில் சில கணக்குகள் மற்றும் பதிவுகள் நீக்கப்பட்டதாக எக்ஸ் (ட்விட்டர்) இன்று (22-02-24) தெரிவித்துள்ளது. 

இது குறித்து, எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்தின் உலக அரசுகள் விவகார பிரிவு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, ‘இந்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்க, குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை இந்தியாவில் மட்டும் நிறுத்தி வைப்போம். இந்த நடவடிக்கையை எடுத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும், கருத்துச் சுதந்திரம் என்பது இந்த பதிவுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது. 

எக்ஸ் நிறுவனம் பதிவை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது பதிவில் மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறீர்கள். இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேட்டால் அவர்களின் பேச்சை கேட்பதை கிடையாது. முன்னாள் ஆளுநர் உண்மையைக் கூறினால் அவர் வீட்டுக்கு சி.பி.ஐயை அனுப்புகிறீர்கள். 

மிக முக்கிய எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குகிறீர்கள். 144 தடை, இணையத்தடை, விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உண்மைக் குரல்களை நசுக்குவது தான் உங்களின் ஜனநாயகமா?. மோடி அவர்களே, நீங்கள் ஜனநாயகத்தை கொன்றுவிட்டீர்கள் என்பது பொதுமக்களுக்கு தெரியும். அவர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.