Skip to main content

போலீசார் அடித்து அவமானப்படுத்தியதால் வாலிபர் தற்கொலை!! வாட்ஸப்பில் கதறல்!!

Published on 22/12/2018 | Edited on 22/12/2018

தன்னைப் போலீசார் தாக்கி கடுமையாக டார்ச்சர் செய்ததோடு, ஆடைகளைக் கிழித்து அவமானப்படுத்தியதாக வாட்ஸ் அப்பில் தன் தோழர்களிடம் கதறி பின்னர் தற்கொலை செய்துகொண்ட வாலிபரால் பரபரப்பு. நெல்லை மாவட்டத்தின் கடையநல்லூரின் முத்துக்கிருஷ்ணாபுரம் ஏரியாவைச் சேர்ந்தவர் தளவாய்சுந்தரம் அந்தப்பகுதியின் ஆட்டோ டிரைவர். திருமணாகதவர். அவரது தம்பிக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், தளவாய் சுந்தரம், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகத் தெரிகிறது. மேலும், தளவாய் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகரை எஸ்டி.யு.தொழிற்சங்க உறுப்பினராகவும் செயல்படுபவர்.

 

 

suicide

 

 

இந்நிலையில் இவரின் காதலையறிந்த பெண் வீட்டார் ஏற்க மறுத்ததுடன் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்து விட்டார்கள். இரவு பெண்ணின் வீட்டு உறவினர் ஒருவர் தளவாய் சுந்தரம் அரிவாளைக் காட்டி மிரட்டியதாகச் சொல்லி, அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல உடன் இரண்டு போலீசாரையும் அழைத்து வந்திருக்கிறாராம். விசாரணை என்று அன்று இரவு தளவாய்சுந்தரத்தை அழைத்து வந்த அந்தப் போலீசார் இருவரும், அவரை டவுண் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வைத்துக் கடுமையாகத் தாக்கி திட்டியுமிருக்கிறார்கள். இதில் அவர்களோடு வந்த அந்த உறவினரும் சேர்ந்தே தாக்கியுள்ளாராம். தளவாயின் மேலாடையைக் கிழித்து அவமானப்படுத்தியுள்ளனர்.

 

நடு இரவில் வீடு திரும்பிய தளவாய்சுந்தரம் மன உளைச்சலால் அவமானம் தாங்காமல், அதிகாலை வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 

தற்கொலைக்கு முன்பு, நடந்தவைகளையும் தான் அவமானப்படுத்தப்பட்டது. பற்றியும் தனது சக உறுப்பினர்களுக்கு வாட்ஸ் அப்பில் பதிவிட்டுக் கதறியதுடன், தன்னைத் தாக்கிய போலீசார், அந்த உறவினர் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டும் தன்னை இக்கதிக்கு ஆளாக்கிய அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தரும்படி குறிப்பிட்டிருக்கிறார்.

 

 

suicide

 

தகவலறிந்த கடையநல்லூர் போலிசார் தளவாயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக டி.எஸ்.பி.ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்களான ஆடிவேல், மற்றும் கோவிந்தன் தலைமையிலான டீம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தொழிற்சங்கவாதியின் தற்கொலைச் சம்பவம், வாட்ஸ் அப் காரணமாகவும் கடையநல்லூர் பகுதி பரபரப்பாகியிருக்கிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.