Skip to main content

மாற்றுத்திறனாளி முதியவருக்கு மூன்று சக்கர சைக்கிளை வாங்கி கொடுத்த மாணவ, மாணவிகள்!

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

Students who bought a tricycle for a disabled old man!

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரத்தில் தில்லை மெட்ரிக் நாட்டுப்பிள்ளை தெருவில் உள்ளது. இந்த பள்ளியின் வழியாக சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி முதியவர் ராமலிங்கம் (வயது 61) அவ்வப்போது இரண்டு கவட்டி தடியைப் பயன்படுத்தி நடந்து செல்வார். சில நேரங்களில் மிகவும் சிதிலமடைந்த மூன்று சக்கர சைக்கிளில் கையால் மிதிக்க முடியாமல் சைக்கிளை ஓட்டி செல்வார். இதனை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பார்க்காமல் இருந்திருக்க முடியாது.

 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அந்த முதியவர் முடியாத நிலையில் இரு கவட்டி தடிகளை ஊன்றியவாறு தில்லை மெட்ரிக் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் கல்வி பயின்று கொண்டிருந்தபோது அங்கிருந்த ஆசிரியரிடம் மிகவும் முடியவில்லை என்றும் இருக்கிற சைக்கிளும் மிகவும் பழுதாகி விட்டது. எதாவது உதவி செய்யுங்கள் எனக் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ஆசிரியர் முதியவரைக் கண்டிப்பாக உதவி செய்கிறோம் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்து உள்ளார்.

 

இந்த சம்பவத்தைப் பார்த்த சக மாணவர்கள் பள்ளியில் படிக்கும் 1- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மத்தியில் பகிர்ந்துள்ளனர். பின்னர் மாணவ, மாணவிகளே தானாகவே பெற்றோரின் அனுமதியுடன் வீட்டில் சேர்ந்து வைத்திருந்த உண்டியல் காசு, சிலர் இந்த சம்பவத்தை பெற்றோர்களிடம் கூறி அவர்களால் முடிந்த காசுகளை வாங்கி வந்து ஆசிரியர்களிடம் கொடுத்து அந்த முதியவருக்கு ஒரு புதிய மூன்று சக்கர சைக்கிள் வாங்கி கொடுங்கள் சார் என்று கூறியுள்ளனர். இதனைக் கேட்ட ஆசிரியருக்கு திகைப்பை ஏற்படுத்தியது. பின்னர் மாணவர்கள் எடுத்து வந்த சிறு சிறு காசுகளை ஆசிரியர்கள் எண்ணியபோது ரூபாய் 7,200 இருந்துள்ளது.

 

இதுகுறித்து பள்ளியின் தாளாளரிடம் ஆசிரியர்கள் கூறியவுடன் மகிழ்ச்சி அடைந்த பள்ளியின் தாளாளர் இதற்கு தானாகவே நிதி திரட்டிய அனைத்து மாணவர்களையும் அழைத்து எந்த நிலையிலும் உதவ வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதில் வளர்த்து கொண்டதற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

 

பின்னர் ஒரு ஆசிரியரை அனுப்பி புதிய மூன்று சக்கர சைக்கிளை வாங்கி வர அனுப்பியுள்ளார். கடைக்காரரோ ரூபாய் 7,800 எனப் பிடிவாதமாக இருந்துள்ளார். அப்போது அந்த ஆசிரியர் மாணவர்கள் நிதி திரட்டிய விசயத்தை கடைக்காரரிடம் கூறியவுடன் ரூபாய் 600 குறைக்கப்பட்டு ரூபாய் 7,200- க்கு புதிய மூன்று சக்கர சைக்கிளை வாங்கினர்.

 

இதனை சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி முதியவாரன ராமலிங்கத்தை திங்கள் கிழமை பள்ளிக்கு அழைத்து வந்து அனைத்து மாணவர்கள் மத்தியில் அவருக்கு புதிய மூன்று சக்கர சைக்கிளை பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட ஆசிரியர் மத்தியில் மாணவ, மாணவிகள் வழங்கி மகிழ்ச்சியுடன் முதியவருக்கு கை குலுக்கினார்கள். மாணவ கண்மணிகள் கை குலுக்கியது தாத்தா நாங்கள் இருக்கிறோம் எதற்கும் கவலை அடையாதீர்கள் என்பதுபோல் இருந்தது.

 

மாணவர்கள் வழங்கிய சைக்கிளில் அமர்ந்த முதியவர் கண்ணீர் மல்க அனைவருக்கும் கைகூப்பி நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்த சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதுகுறித்து பள்ளியின் தாளாளர் செந்தில்குமார் கூறுகையில், "பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் முதல் உறுதிமொழியாக கூறுவது நாம் பள்ளிக்கு வரும் வழியிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ பலர் நம்மளவிட துயரத்தில் இருப்பார்கள் அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு எதோ ஒரு வகையில் உதவ வேண்டும் என்பதை நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி ஆசிரியர்கள் மனிதநேயத்தை வளர்க்கும் விதமாக கூறிவருகிறார்கள். அதன் அடிப்படையில் மாணவர்கள் சிறுவயதிலே இதுபோன்று தானாக மனிதநேயத்தை வளர்த்து கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதில் பள்ளி நிர்வாகத்தின் பங்கு ஒன்றும் இல்லை" என்றார்.    

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.