Skip to main content

வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழந்த பரிதாபம்

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

Student passes away in perambalur who in school class room

 

பெரம்பலூர் மாவட்டம், பாடலூர் அருகே உள்ள டீ களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மகவீன்(16). இவர், அருகில் உள்ள தேனூர் கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, மாணவன் மகவீன் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்தார். 

 

இதனைக் கண்ட ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த செய்தியை கேட்டு ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கதறி அழுதனர். 

 

இது குறித்து பாடலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவர் மகவீன், கடந்த ஓராண்டாகவே இதய நோய் சம்பந்தமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அவர் இதய நோய் பாதிப்பினால் திடீரென உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்