Skip to main content

திருவாரூரில் கச்சா எண்ணெய் எடுத்து செல்வதை கண்டித்து போராட்டம்

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
kk

 

  திருவாரூர் அருகே விளைநிலங்களின் வழியாக கச்சா எண்ணெய் எடுத்து செல்ல ஐஓசி நிறுவனம் சார்பில் இறக்கப்பட்ட குழாய்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

கடந்த 2012ம் ஆண்டும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இயற்கை எரிவாயு கழகம் எடுக்கும் கச்சா எண்ணெய் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷசன் நிறுவனம் திருச்சி வரை கொண்டு செல்ல முடிவு செய்து விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணியை தொடங்கியது. இந்த பணிகளுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவியதையடுத்து ஐஓசி நிறுவனம் குழாய் பதிக்கும் பணிகளை நிறுத்தக் கொண்டது.

 

இந்நிலையில் திருவாரூர் அருகே ஐஓசி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த சொரக்குடி, மூங்கில்குடி, மூலங்குடி, காக்க கோட்டூர், ஓமக்குளம் உள்ளிட்ட 10 கிராமங்களில் ஐஓசி 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குழாய் பதிக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக நேற்று நள்ளிரவு காவல்துறையினர் துணையுடன் உமாதேவி என்பவரது சம்பா சாகுபடி செய்யப்பட்ட விளை நிலத்தில் குழாய்கள் இறக்கியுள்ளது ஐஓசி நிறுவனம்.

 

இதனையறிந்த நிலத்தின் உரிமையாளர் மற்றும் கிராம மக்கள்,  குழாய்கள் இறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது விளைநிலங்களில் குழாய் பதிக்க அனுமதி வழங்கவில்லை. அத்துமீறி குழாய்களை சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் இறக்கி உள்ளனர். அந்த குழாய்களை உடனடியாக விளைநிலங்களிலிருந்து அகற்ற வேண்டும். மக்களின் எதிர்ப்பை மீறி குழாய் பதிக்க முற்பட்டால் கடுமையான போராட்டங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட  நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலையில் கொட்டிய ஆயில்; அடுத்தடுத்து சறுக்கிய வாகனங்கள்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Oil spilled on the road; Vehicles that slid in succession

சாலையில் கொட்டிய ஆயிலால் அடுத்தடுத்து இரு சக்கர வாகனங்கள் சறுக்கி விழுந்த சம்பவம் சென்னையில் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக இன்று அதிகாலை நுங்கம்பாக்கம் நோக்கி அடையாளம் தெரியாத லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரியில் இருந்த ஆயில் அதிகளவில் சாலையில் கொட்டியுள்ளது. இதனையடுத்து அவ்வழியாக வந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் கொட்டிய ஆயிலால் சறுக்கி விழுந்தன. இதனால் ஏராளமான வாகனங்கள் விபத்தில் சிக்கின.

இந்த விபத்தில் சிக்கிய ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை போக்குவரத்து போலீசார் சாலையை சரி செய்தனர். அதே சமயம் ஆயில் படிந்த சாலையில் மண்ணை பரப்பி தூய்மைப் பணியாளர்கள் சாலையை சீரமைத்தனர். 

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.